பேச்சு முடிவடைய ,செந்திலும் அவளுமாக திரும்பி வரும்போது ,ஏனோ இதோ போல சமயங்களில் உடன் வரும் தமிழ் நினைவு வர ,மனம் அதற்கு ஏங்குவது அவளுக்கு புதிதாய் நெஞ்சில் பதிந்தது .
அவள் எதிர்பார்த்ததைவிட விட பரபரப்பாய் வாரக் கடைசி கடந்து விட ,வழக்கம் போல் ,புதிய வாரத்தின் முதல் நாளை உற்சாமாக வரவேற்றாள் .
அன்றைய முதல் வகுப்பில் ,அவள் புதிதாய் அறிமுகப்படுத்தி இருக்கும் இரு மொழி கற்கும் முறைப்படி ,வாரக்கடைசியில் படித்து வர ஒரு பாடம் கொடுத்து இருந்தாள்
இப்போது அது சம்பந்தமாக வகுப்பில் உரையாட ,வகுப்பை இரண்டு பிரிவாக பிரிக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது .
பொதுவாக யார் யார் எந்த பிரிவில் இருப்பது என்பதை அவர்கள் இஷ்டத்துக்கே விட்டு விடுவாள் .
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று அவன் விரைந்து வகுப்பை நெருங்க ,தாரிக்காவின் அழுத்தமான குரல் அமைதியாக ஒலிக்க ஆரம்பித்தது .
அவள் பேசிய விஷயம் அவனை நின்று கேட்க வைத்தது .
''அந்த மூன்று பேரும் எதுக்கு இப்போ வெளிய போறாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சுக்க ஆர்வம் தானே ''