(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ

anbin Azhage

உன் முகம் கொண்ட பருவினிலும்

வின் மீன் ஒலிகள் வீசுதடி

கோபம் வழியும் வேளையிலும்

இதயம் கண்ணில் மின்னுதடி

மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............

எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்

அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்

உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

 

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்

ஏமாந்த பெண்ணை தேடி போயா

உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல

முள்ளோடு தேனும் இல்லை போயா

ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை

உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை

நீ கல்லை தந்து கனியோ என்று

காதல் செய்வது வீண் வேலை

காலையில் எழுந்தவன் சீக்கிரமாகவே தயாராகி அன்னையைத் தேடிச் சென்றான்.தந்தையிடமும் அளவுகடந்த அன்பு இருக்கிறது எனினும் தனக்கு வேண்டிய காரியம் சாதிப்பது அன்னையிடம் தான்..

ம்மா..”

சொல்லு கண்ணா..பால் சாப்டுறியா இல்லை டிபனே வைக்கட்டுமா??”,என்றவாறு வேலைகளை கவனித்து கொண்டிருந்தவரை தன்புறம் திருப்பியவன்,

ம்மா முக்கியமான ஒரு விஷயம் இங்க உக்காரு முதல்ல..”

டேய் ஏதோ புது ப்ராஜெக்ட் நேரமில்ல அது இதுனு சுத்திட்டு இருந்த இப்போ என்ன உக்காந்து பேசுற அளவு முக்கியமான விஷயம்?”

ம்மா நா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..”

அபி கண்ணா நிஜமா தான் சொல்றியா??இப்போவே அப்பாவ போய் தரகரை பாக்க சொல்றேன்..”

அதெல்லாம் தேவையில்லம்மா..எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சுருக்கு..”

டேய் என்னடா சொல்ற!!அப்போ அதனாலதான் இவ்ளோ நாள் கல்யாண பேச்சு எடுத்தாலே நழுவி ஓடினியா??”

ஐயோ அப்படி எதுவுமே இல்ல..நேத்து தான் அவளை பாத்தேனே..”,என்றவன் அவளைப் பற்றி விவரத்தைக் கூற சாரதா ஒரு நொடி பயந்து தான் போனார்..

அபி!!!இதெல்லாம் சரியா வராதுடா!!”

ஏன்மா அப்படி சொல்ற நீ தான சின்ன வயசுல இருந்து எல்லார்கிட்டேயும் அன்பா இருக்கணும்னு சொல்லி வளர்த்த இப்போ என்னாச்சு?”

அபி கண்ணா அது வேறடா..இது நம்ம குடும்பம் சம்பந்தபட்ட விஷயம் அப்பா என்ன சொல்லுவாரு..சொந்தகாரங்களையெல்லாம் எப்படி பேஸ் பண்றது எவ்வளவோ இருக்குடா!!”

ம்மா நீ சொல்ற எல்லாமே எனக்கும் புரியுது..ஆனா அதையும் மீறி எனக்கு கல்யாணம்ங்கிற நினைப்பு வந்ததே அவளை பாத்துதான்..நீ கேக்கலாம் என்னடா ஒரு பத்து நிமிஷம் பாத்ததுக்கு இவ்ளோ பேசுறநு..

உனக்கே தெரியும் தான எனக்கு எவ்ளோ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அதுலயும் க்ளர்ஸ்..அத்தனை பேரையும் மீறி மனைவியா பாக்க நினைக்குற ஒரே பொண்ணு இவ மட்டும் தான்ம்மா..இதுக்கு மேல என் பீலிங்க்ஸ எக்ஸ்ப்ரஸ் பண்ண தெரில..நீ யோசிச்சு சொல்லுமா..லேட் ஆச்சு நா கிளம்புறேன்..பை மா..”,என்றவனிடம் ஒன்றும் பேச தோன்றாமல் அதிர்ச்சியில் அவர்நிற்க,

நிதானமாய் உள்ளே நுழைந்த ராகவன் அவரிடம்,”என்ன சாரதா பையன் காலைலேயே ஏதோ காதை கடிச்சுட்டு போறான்..என்ன விஷயம்??”

அது வந்துங்கஎன தயங்கி தயங்கி கூறி முடித்தவர் கேள்வியாய் கணவரைப் பார்க்க,

சாரதா அந்த பொண்ணு யாரு என்னனு நம்ம நரேன்கிட்ட விசாரி..”

அபிப்பா!!!”

ஏன் சாரதா இவ்ளோ டென்ஷன்..அவனோட நினைப்பு நம்ம எத்தனை பேருக்கு வரும்..எவ்ளோ பெரிய வேலைல இருக்கான்..எப்படிபட்ட வரன் எல்லாம் வந்துருக்கு அதெல்லாம் மீறி அவன் அந்த பொண்ணை பிடிச்சுருக்குனு சொல்றான்னா.கண்டிப்பா எல்லாம் சரியா வரும்...நீ கேளு அப்பறம் பாப்போம்..”

அடுத்த அரை மணி நேரத்தில்தன் வேலையெல்லாம் முடித்தவர் நரேனுக்கு அழைத்து பேச ஆரம்பித்திருந்தார்..கேட்ட வரை அனைத்துமே திருப்தியாய் இருப்பதாய் தோன்ற அவர்களின் விவரங்களை வாங்கிக் கொண்டார்.

ராகவனிடம் கலந்து ஆலோசித்து அன்று மாலையே அவர்கள் வீட்டிற்கு இருவருமாய் சென்றனர்..நடுத்தர குடும்பத்திற்கான சிறிய வீடாய் இருக்க அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தனர்.ஐந்து நிமிடம் ஆகியும் கதவு திறக்காமல் இருக்க மறுபடியும் அழைப்பு மணியை அழுத்தச் சென்ற நேரம் கதவு திறக்க ஒரு படி இறங்கி கீழே நின்றார் ராகவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.