“அச்சச்சோ... எவ்வளவோ நல்லவர் இவர்... முதல்ல எழுந்து உட்கார்ந்து பேசு.....”
“என் அம்மா... நான் படுத்திருக்கேன்... உனக்கென்ன ஆச்சு...”
“எப்போவுமே நான் தான் அம்மா செல்லம்...”
“அந்த காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு... இனிமே அம்மாக்கு நான் தான் செல்லம்...”
“ஓஹோ... நீ சொன்னா, நாங்க சும்மா இருப்போமா...?”
“மைத்தி, எதுக்கு அவன் கிட்ட இப்படி சும்மா சண்டையை வளர்க்குற.... பாப்பா எங்கே, இன்னுமா தூங்குறா?” என மகளின் பேச்சை திசை திருப்ப முயன்றாள் நளினி.
ஆனால் மைத்ரேயி அப்படி மித்ரனை விட்டுவிடும் மனநிலையில் இல்லை...
“ஆமாம்மா தூங்குறா...” என்று அம்மாவிற்கு பதில் சொல்லிவிட்டு, அண்ணனிடம்,
“ஏன் அண்ணா, அம்மா செல்லம் அது இதுன்னு சொல்ற, ஒரு வொர்கிங் டேல எப்போ நீ கடைசியா அம்மா கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்திக்க முடிகிறதே... சந்தோஷப் படாமல் என்ன செய்வாள்...
தினம் தினம் சாப்பிட்டு முடித்து அம்மாவுடன் கிளம்பி செல்லும் முன், அன்று காலை முதல் இரவு வரை நடந்தவற்றை மறக்காமல் அவனிடம் ஒப்பித்தாள்....
மித்ரனும் அதை கவனத்துடன் கேட்பதை பார்த்து அனைவருக்குமே ஆச்சர்யமாக தான் இருந்தது...!!!