அப்பொழுது தான் கவனித்தாள் மூன்று பெண்கள் இருந்தனர்..
“என்னடி இது?? மேக்கப் போட மூன்று பேரா? “ என்று வியந்தாள் சரண்யா...
“காலேஜ் ல மேக்கப் னா காத தூரம் ஓடுவ. இப்ப என்னடான்னா மூன்று பேரா உனக்கு மேக்கப் போட“
“நீ வேர கடுப்பேத்தாதடி.. இதெல்லாம் அவனோட ஏற்பாடு.. நான் வேண்டாம் என்றாலும் கேட்காம இவங்க வந்திட்டாங்க.. திரும்பி போக சொன்னா பாஷ் ஆர்டர்.. நாங்க நிறை வேற்றனும்னு கடந்த 2 மணி நேரமா என்னை பிடிச்சு உட்கார வச்சிட்டாங்க “ என்று முறைத்தாள்..
“ஹ்ம்ம்..... சரி.. போன்ல தான் பேசலை. நேர்லயாவது பார்த்தியா இல்லையா? எப்படி இருந்தார்??? ” என்று மெதுவாக கேட்டாள்..
“எல்லாம் மெதுவா பார்த்துக்கலாம். காலம் பூரா அந்த மூஞ்சிய தான பார்க்க போறேன்..”
“என்னடி இது??? நேர்லயும் பார்க்கல. ப
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் ஏற்கனவே மாட்டி இருக்கறதே அதிகம்.. இதுக்கு மேல போட்டா, நான் தாங்க மாட்டென்” என்று மறுத்தாள் பவித்ரா...
“எத்தனை நகை போட்டாலும் வைரத்திற்கு ஈடாகுமா?? . அதுவும் இல்லாமல் இது பரம்பரை நகை.. வீட்டிற்கு வரும் மருமகளுக்கு என்று வழி வழியா குடுத்துட்டு வரதுமா.. மறுக்காத.. போட்டுக்கோ...”