சரண்யாவிற்கு அன்று நளினியையும் அவரின் குடும்பத்தையும் எதிர்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை என்று தோன்றியது. மைத்ரேயியின் பாராமுகத்தையும், மித்ரனின் புன்னகை மின்னும் முகத்தையும் கையாளுவது சுலபமில்லை என்பது புரிய,
“இல்லம்மா... எனக்கு தலை வலிக்குற மாதிரி இருக்கு... அதனால தோசையே போதும்... நிஷாவுக்கும் இன்னைக்கு ஒரு நாள் அதையே கொடுத்துடுறேனே....” என்றாள்.
அந்த பக்கம் அமைதியாக இருக்கவும் நளினி தவறாக நினைதிருப்பார்களோ என்ற கவலை அவளுக்கு தோன்றியது. ஆனால் நளினி,
“தலை வலிக்கு மருந்து ஏதாவது வேணுமா சரண்யா?” என கேட்கவும் அவளின் மனம் நெகிழ்ந்து போனது.
“இல்லம்மா... தூங்கி எழுந்தா சரியா போகும்னு நினைக்கிறேன்...”
“சரி... பார்த்துக்கோ... ஏதாவது வேணும்னா போன் செய்...”
“சரிம்மா...” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}