மகேந்திரனுக்கு அவளை நேர்க்கொண்டு பார்க்க கூசியது.
இருந்தும் அவனுக்கு ஒரு கடமை பாக்கியிருக்கிறது. அவளைத் தவறாகப் பேசிவிட்டான். அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
“என்னை மன்னிச்சிடு.”
மெதுவாக முணுமுணுத்தான்.
அவளிடம் எந்த சலனமும் இல்லை.
அவளை விட்டு விலகினான்.
கட்டிலின் ஒரு ஓரத்தில் தன்னை குறுக்கிக்கொண்டு படுத்தாள்.
இந்த நேரத்தில் அருண் போன் செய்ததால் அவளைப் பற்றிப் புரிந்து கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். இல்லை என்றால் அவளைப் பற்றி இன்னும் தவறாகத்தானே எண்ணிக்கொண்டிருப்பான்.
என்றுதான் அவன் தன்னைப் புரிந்துகொள்வான்?
ஆயாசமாய் வந்தது.
மகேந்திரன் தனது அலுவலுக்குச் சென்றுவிட்டான்.
இப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்களில் யாரைப் பற்றியும் அவன் இத்தனை பேசியதே இல்லை.
ஆனால் இன்று, அதுவும் ஒரு பொண்ணைப் பற்றி பேசுகிறான் என்றால்?
“என்ன யுகா? அந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருப்பாளோ?”
“ஆமாம் அம்மா. ஆனால் எப்ப பாரு ரொம்ப சோகமா இருக்கா. அப்படி என்னதான் கவலையோ?”