“படிக்கனும்னு கவலைப்படறாளோ? என்னவோ?”
அவர் கிண்டலாகக் கூறினார்.
“சேச்சே. அப்படி இல்லைம்மா. அவள் படிக்கிறதுக்கு பயப்படற ஆள் மாதிரி தெரியலை. யார் கூடவும் சேர்ந்து அரட்டை அடிக்காம தனியா உட்கார்ந்து இருக்கா. கிராமத்திலிருந்து வந்திருக்கான்னு நினைக்கிறேன். பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.”
“ஒருவேளை நகரத்து வாழ்க்கையைப் பார்த்து பயப்படறாளோ? என்னவோ?”
“தெரியலைம்மா. நான் அவகிட்ட பேசிப்பார்க்கனும்.”
“நீ ஏம்பா அவளைப் பற்றி இத்தனைக் கவலைப்படறே?”
மகனின் மனதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக கேட்டார். ஒரு வேளை பார்த்த உடனே அந்தப் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டானா?
“தெரியலைம்மா. எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா இரு ... ியை கிருஷ்ணவேணி அவன் முன் வைத்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
அவனால் அவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
அவளும் அவனை வற்புறுத்திக் காரணம் கேட்கவில்லை.
ஆனால் அவனுக்கும் வனிதாமணிக்கும்தான் அந்தக் காரணம் தெரியும்.
அது அவன் பள்ளிப்பருவத்திலே நடந்தது.