(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 04 - அஸ்ரிதா ஸ்ரீ

Partha muthal naale

பெத்தவங்களை வயசு இருக்கும் போது தாங்குறது பெரிய விஷயம் இல்லை.வயசானபுரமும் பாத்து பாத்து செய்யுறது தான் பெரிய விஷயம்.

பாத்து பாத்து நம்மள வளத்தவங்களுக்கு நம்மளால செய்ய முடியுற ஒரு சின்ன நன்றி கடன்.கோடி கோடியா குடுக்க வேண்டாம்.சாப்டியா நல்லாருக்கியான்னு அப்போப்போ ஒரு கால்.

ஹைபி ஒரு ஹாப்பி நியூஸ்.

ம்ம்ம்

நான் எவ்ளோ எனர்ஜி ஆ சொல்றேன். நீ ம்ம்ம்ம்ம் சொல்ற. என்னனு எனர்ஜியோட கேளு .

ம்ம்ம்ம் என்ன சரண்.

இதுவா உன் எனர்ஜி.

போங்க நீங்க

ஹோய்ய்ய்ய் அப்போ நீ வெக்க பட்ரியா.

சரன்ன்ன்ன்ன்ன்ன் போங்க நான் வைக்குறேன்.

ஹைபி வர சண்டே நமக்கு பூ வைக்க போறாங்களே. அது என்னனு கொஞ்சம் சொல்லேன்.

ஏன் அத்தை சொல்லல்லையா?

ஏதோ உனக்கு நான் எனக்கு நீ நு கன்போர்ம் பண்ணுவாங்கலாமே.

ம்ம்ம்ம் அதே தான்.

தெரியாத மாதிரி கேக்குறத பாரு.

ஹி ஹி எனக்கு தெரியும் இருந்தாலும் எனக்கு நீ உனக்கு நான் நு நீ சொல்லி கேக்கணும் போல இருந்தது. சரி எப்போ கிளம்புற ஹைபி.

ஃப்ரைடே நைட் சரண்

நானும் வரட்டுமா

ஓஓஓஓ வாங்களேன்

வாவ் தங் யூ பேபி.

இப்போ ஏன் தேங்க்ஸ்.

நம்ம சேர்ந்து போக ஓகே சொன்னேல அதுக்கு தான்.

ஹெலோ நான் அப்படி சொல்லவே இல்லை.

இப்போ தான வாங்க நு சொன்ன.

ஊருக்கு வாங்கனு தான் சொன்னேன் சேர்ந்து போவோம்னு சொல்லல சார் .

 என்ன சரண் ஒழுங்கா பேசாம வந்து சேருங்க.

மஹி படிப்பிற்காக தன் பூர்விகம் பண்பொழி யை விட்டு மதுரை வந்தவர்கள் இப்போது அவள் படிப்பு முடியும் தருவாயில் மீண்டும் அந்த அழகிய கூட்டிற்குள் ஐக்கியம் ஆகினர். மஹிக்கு இன்னும் 3 மாத படிப்பு அதுவும் ப்ராஜெக்ட் ஒர்க் மட்டுமே இருப்பதால் ஹாஸ்டல் போகிறேன் என்று சொல்லியிருந்தாள்.

 பண்பொழியின் பாச கூடு.

டேய் சின்னவனே சஹியை கூப்பிட யாரு போறீங்க.

 அண்ணன் போறான் மா.

 உன் தங்கச்சி காளி எங்க டா.காலைல இருந்து காணோம் என்று 70 வயது ஆகியும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார் சஹியின் பாட்டி.

நாளைக்கு போட பிளவுஸ் தைக்க குடுக்க போயிருக்காங்க அத்தை என்று பதில் அளித்த சிறிய மருமகளிடம் ஏன் சங்கீதா ரியா ஸ்கூல் கிளம்பிட்டாளா. கிளம்பிட்டே இருக்கா அத்தை.

ஈஸ்வர் எங்க ma.

அவன் மாமா கூட முடி வெட்ட போயிருக்கான் அத்தை. அக்கா தனியா அடுப்புல வேலை செய்றாங்க நான் போறேன் அத்தை.

ஹாஆஅய்ய்ய்ய்ய்ய்ய் பாட்டி

வா சஹி என்ன இப்படி இளைச்சுட்ட.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இது உங்களுக்கே ஓவரா தெரில 15 நாளைக்கு முன்னாடியும் இப்படி தான் இருந்தேன்.ஒவ்வொரு தடவையும் இப்படி தான் சொல்றிங்க. சரி எங்க வானர படையை காணோம்.

 உன் கூட்டத்தை நீயே போய் கண்டு பிடி.

அக்காஆஆஆ என்று அவளை ஒரு கை அணைத்தது. அவளுடைய ஆருயிர் தம்பி (சித்தப்பா பையன்) என்று சொல்லாமலே தெரியும். அவன் எப்பொழுதும் அப்படித்தான் அக்காக்களிடம் அன்பாக ஒட்டிக்கொள்வான்.

டேய் ஈஸ்வர் ஹேர் என்ன டா இப்படி என்று முடியை தொட்டாள்.

ஸ்கூல் ல இப்படி தான் வெட்ட சொல்லிருக்காங்க.

 அய்யோ என் தம்பியின் அழகே முடி தான்.தாத்தா எங்க டா?

 வெளில பெரிப்பா கூட பேசிட்டு இருக்காங்க.

 தாத்தா எப்படி இருக்கிங்க.

 நல்லா இருக்கேன் பாப்பா நீ ஏன் மெலிஞ்சுட்ட.

என்னது இவ பாப்பாவா என்று வந்தான் அவளின் அத்தை மகன் இவளை விட 3 வயது சிறியவன் வேலவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.