தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 09 - சுபஸ்ரீ
ஏற்கனவே சூர்யாவை வெறுப்பேற்றியதில் மகிழ்ந்திருந்த ஆகாஷ் “ஆகாஷ் நீ எனை லவ் பண்றியா?” எனக் கேட்ட சாருவின் கேள்வியால் சந்தோஷத்தில் திளைத்துப் போனான். அவள் இத்தனை போல்டாக கேட்பாள் என எதிர்பார்க்கவில்லை.
ஐ லைனர் கண்கள், லிப் க்ளாஸ் உதடுகள், பிளஷ் செய்யபட்ட கன்னங்கள், நீண்டு பின்பு இறுதியில் உருண்டு திரண்டு தற்காலிக மூக்குத்திக் கொண்ட நாசி, பெர்ப்யூம் வாசம் என அவளை அருகில் கண்டவன் தன்னிலை மறந்துப் போனான்.
சாரு அவன் உணர்வுகளை ரசித்தபடி பதிலுக்காக காத்திருந்தாள்.
“உனை லவ் பண்றேனு யாரு சொன்னா?” என சமாளித்தபடி கொஞ்சம் கெத்தாக கேட்டான்.
இதற்கெல்லாம் அசந்துவிடுபவளா சாரு “தேங்க் காட் . . எங்க நீ ஆமானு சொல்லிட போறியோனு பயந்துட்டேன்”
“ஐயோ இவ என்ன புது ரூட்ல போறா?” என மனதில் ஓடியவற்றை மறைத்து “ஆமானு சொன்னா என்ன பண்ணுவ” எனக் கேட்டான்
“அது . . வந்து . . என் . . அக்காவ . . யாரு ஆசரமத்துல இருந்து வெளில கொண்டு வராங்களோ அவங்களதான் கல்யாணம் பண்ணிப்பேன். . ” என ஒவ்வொரு சொல்லாக இழுத்து அவன் பீபியை எகிற வைத்தாள்.
“சுயம்வரமா?” கிண்டலாக கேட்டான்.
அவள் இமைகள் ஆமென்றது. குறும்பு சிரிப்புடன் “ஆல்ரெடி இந்த ரேஸ்ல இன்னொருத்தர் இருக்கார் பா” என்றாள்
“யாரு சூர்யாவா?” சூடாக கேட்டான்
“சொல்ல மாட்டேன் . . நீயே கண்டுபிடி” குழந்தையைப் போல கேட்டாள்.
காஞ்சனாவின் குரல் பக்கத்து அறையில் கேட்க . . சாரு “காஞ்சனா மேம்” என அவசரமாக கூப்பிட்டபடி ஓடினாள். அவரை தங்கள் அறைக்கு அழைத்து வந்தாள்.
காஞ்சனா ஆகாஷை பார்த்து புருவத்தாளே “ஹாய்” சொன்னார். அவனும் மரியாதைக்கு புன்னகைத்தான்.
சாரு காஞ்சனாவிடம் “நான் இன்டியா போலாம்னு இருக்கேன் . .” என்றவாரு ஆகாஷை பார்த்தாள்.
“சாரு சிஸ்டர் விஷயமா கொஞ்சம் வேலை இருக்கு . .சோ ஒன் மன்த் ” என ஆகாஷ் முடிக்க . .
அதற்குள் “ஒன் மன்த்ல முடிஞ்சிடுமா?” காஞ்சனாவின் தொனியில் இருந்த சந்தேகம் தெளிவாக புரிந்தது.
பெருமூச்சோடு “ஹோப் சோ” என்றான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“தாராளமா போயிட்டு வா சாரு . . நானும் உன் அக்காக பிரே பண்றேன்” என காஞ்சனா சொல்லி அகன்றார்.
இத்தனை நேரம் மலர்ந்த முகமாய் இருந்தவள் தளர்ந்து போயிருந்தாள்.
“ஹே கமான் சாரு” என அவள் நிலை புரிந்தவனாய் தேற்றினான்.
“இதெல்லாம் முடியுமா ஆகாஷ்?”
“கண்டிப்பா முடியும் டா கவலப்படாத”
“எனக்கு நம்பிக்கையே இல்ல” என சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் கன்னம் தாண்டி ஓடியது.
அவளை இதமாக அணைத்தான் “ஐய்யோ டேம் ஒபன் பண்ணாதமா” என்றான். அவனை செல்லமாக முறைத்து தன் போனை எடுத்து எதையே தேடினாள் . .இரண்டொரு நொடியில் ஆகாஷின் வாட்ஸ்அப் கிக்கிக் என்றது.
பாரு என கண்ணால் ஜாடை செய்தாள். எடுத்து பார்த்தவனிடம்
“இந்த கம்பெனியில சுவாதி ஹெச். ஆர் டிபார்ட்மெண்ட்ல ஒரு வருஷமா வேல செஞ்சா அதுக்கு அப்புறம்தான் ஆசிரமம் போனா” என்றாள்.
ஆகாஷ் உடனே அதை லியாவிற்கு சில தகவல்களுடன் பார்வேட் செய்தான்.
“ஆபிஸ் டைமிங் எப்படி?”
“நைன் டூ சிக்ஸ் தேர்டி . . செவன்க்கு வீட்டுக்கு வந்திடுவா”
“சுவாதி பத்தி கொஞ்சம் சொல்லு . .”
“மனசுல பட்டத பட்டுனு சொல்லிடற டைப் . . பிடிக்குது பிடிக்கல எல்லாமே . . ரொம்ப போல்ட் . .”
“சூர்யாவோட . .எப்படி?” கேள்வி பொருள் எசகுபிசகாக கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
“நான் அக்காகிட்ட இதபத்தி கேட்டப்போ பிடிச்சிருக்கு பிரபோஸ் பண்ணே இதுல என்ன தப்புனு சாதாரணமா கேட்டா?”
“சூர்யா ரிஜெகட் செய்ததும்?” ஆகாஷ் கேட்க
“முதல் நாள் சோர்வா இருந்தா . . அப்புறம் நார்மல் ஆயிட்டா . . எனக்கு பிரபோஸ் பண்ண உரிமை இருக்கு அதே மாதிரி அவனுக்கு ரிஜெகட் பண்ணவும் உரிமை இருக்குனு” சிரிச்சிட்டே சொன்னா
“நாங்க ஒரு நாள் ரெஸ்டாரண்ட் போயிருந்த சமயம் . . அக்கா கைய கிள்ளினா ஒரு ராஸ்கல் . . பளார்னு கன்னத்துல அறைஞ்சிட்டு .. எதுவுமே நடக்காத மாதிரி உடனே சாப்பிட ஆரம்பிச்சிட்டா”