அவள் தலையை அசைக்க தொடங்கிய உடனேயே நிஷா துள்ளலுடன் மித்ரனை தேடி ஓடினாள்.
அவளின் சந்தோஷத்தை பார்க்கும் போது நல்ல வேளை வேண்டாம் என்று மறுக்கவில்லை என நினைத்துக் கொண்டாள் சரண்யா.
நிஷா பார்க்குக்கு சென்று திரும்பி வந்த பிறகு ஒரே மித்ரன் புராணம் தான்!!!
நிஷாவிற்கு பார்க்கில் இருக்கும், ஊஞ்சல், சறுக்கு மரம், சீ – சா, மங்கி பார்ஸ் என அனைத்திலும் விளையாட பிடிக்கும். ஆனால் வார இறுதி நாட்கள் தவிர மற்ற நாட்கள் அவளை விளையாட அழைத்து செல்ல சரண்யாவிற்கு நேரம் இருந்ததில்லை.
மித்ரன் அந்த பார்க்கிற்கு அழைத்து சென்றான்... இதில் விளையாட வைத்தான்... அதில் அழைத்து சென்றான்... இப்படி செய்தான்... அப்படி செய்தான்... என அவள் விளையாடியதை மித்ரனின் பெருமைகளாக சொல்லிக் கொண்டே போனாள் நிஷா...
நிஷா இப்படி எல்
...
This story is now available on Chillzee KiMo.
...
மே கூறினான்... அவள் மறுத்த போது கோபம் கொள்ளாமல் விளக்கம் மட்டுமே கொடுத்தான்...
அவன் நல்லவன் தான்...
ஒருவேளை அந்த சஞ்சீதா மட்டும் அவன் வாழ்வில் வராமல் போயிருந்தால் நல்ல விதமாகவே இருந்திருப்பான்....
மித்ரனை பற்றி யோசித்த படி, மருந்தின் விளைவினால் மெல்ல தூங்கிப் போனாள்...