பாரதியும் உடனே சமாளித்துக்கொண்டு
“நான் ஒன்னும் கண்ணை கசக்கலை அத்தை.. நான் என்ன ஜானகி அத்தையா... எதுக்கு எடுத்தாலும் கண்ணுல தண்ணியை வச்சுகிட்டு இருக்க... என் கண் வேர்த்தது.. அதான் துடைச்சுகிட்டு இருக்கேன் “ என்று சிரித்தாள்...
அதை கண்டதும் ஜானகியும் சிரித்து கொண்டே
“ஹ்ம்ம்ம் இப்ப தான் நீ என் பாரதியாம்...இப்படி எப்பவும் நீ சிரிச்சுகிட்டே தான் இருக்கனும்” என்று நெட்டி முறித்தார்...
“அப்புறம் பாரதி மா.... பிறந்த வீட்டை விட்டு பிரிந்து வருவதுனா எவ்வளவு வேதனை னு எனக்கும் தெரியும் பாரதி மா... நான் கல்யாணம் ஆகி வரும்பொழுது அழுத அழுகை இருக்கே .... ஒரு வாரம் ஆகியும் கூட என் அழுகை நிக்கலை... நான் அழுவதை பார்த்துட்டு ராம் அவரைத்தான் பிடிக்காமல் நான் அழறேனு பயந்து போய்ட்டாரம்.. இத சொல்லி சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஜானகி இந்த பங்களாவை ரெடி பண்ண சொல்லி, பாரதியை இங்கயே தங்க வைப்பது என்று முடிவு செய்து இங்கு அழைத்து வந்திருந்தார்
சிறிது நேரம் தன் மூளையை கசக்கிய பாரதி ஜானகியிடமே தன் சந்தேகத்தை கேட்டாள்.
"ஏன் அத்தை?? .. நீங்க இங்க இல்லையா??? "
என்ன சொல்வது என்று சிறிது தயங்கியவர்,