தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு
“சிவா எங்கே?”
கேட்டவாறே உள்ளே நுழைந்தார் சந்திரசேகர்.
என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர் தாயும், மகளும்.
நடந்ததெல்லாம் கனவா? நனவா? என்றே இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை.
பிரச்சினைக்குரியவர்கள் இருவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
இவர்கள் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்த வேளையில் சரியாக சந்திரசேகர் வந்துவிட்டார்.
கணவர் பதிலுக்காக காத்திருக்கிறார் என்று புரிய வர தடுமாற்றமாய் கணவரை
...
This story is now available on Chillzee KiMo.
...
ருப்பையாவிடமே திருமணத்தை மறுத்துவிடுவாளோ? என்ற பயம் அவளுக்கு.
“இருங்க மாப்பிள்ளை. குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்.”
“கொஞ்சம் இருங்க அத்தை. பேசனும்.”
அவள் அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டதால் அவனே திருமணத்தை நிறுத்திவிடச் சொல்லப் போகிறானா?