அவன் அதற்குள் தனது சட்டைப் பையினுள் இருந்து அந்த சிறிய நகைப் பெட்டியை எடுத்தான்.
“நிச்சயத்தன்றே நான் போட்டுவிடனும்னு நினைத்தேன். ஆனால்…” அவன் முடிக்காமல் இழுத்தான்.
சீதாலெட்சுமிக்குப் புரிந்தது.
நிச்சயத்தன்று யாரோ மாப்பிள்ளை செயினை பொண்ணு கழுத்தில் போட்டுவிடட்டும் என்று சொன்னதற்கு அது தங்களுக்குப் பழக்கமில்லை என்று மறுத்துவிட்டார் சந்திரசேகர்.
வீட்டில் சந்திரசேகர் இல்லையென்று தெரிந்துதான் அவன் வந்திருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது.
ஏனென்றால் பங்காளி வகையில் ஒரு தம்பதியை அழைத்துக்கொண்டு அவரும் மாப்பிள்ளை வீட்டு உறவு வகையில் உள்ளவர்களை திருமணத்திற்கு அழைக்கத்தான் சென்றிருக்கிறார்.
அது கண்டிப்பாய் அவனுக்குத் தெரிந்திருக்கும்.
அவளுக்கு கருப்பையாவின் மனம் புரிந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏன் என்கிட்ட காட்டலை?”
அப்படியே வெடித்தழுதாள்.
“என்னடி ஆச்சு?”
“ஒன்னும் ஆகலை. எல்லாம் உங்க ஆசைப்படிதான் நாங்க நடக்கனும் இல்லை.”
அதே அழுகையுடன் கேட்டாள்.
அதன் பிறகு சீதாலெட்சுமி தங்கள் அறைக்குச் சென்று அந்த புகைப்படத்தைக்கொண்டு வந்து மகளிடம் நீட்டினாள்.