அவள் நாடிவந்த இளைப்பாறல் அவளிடம் கிடைக்காது என்பதை உணர்ந்துதான் இருந்தான். இருந்தாலும் தனக்கு அவளின் மேல் ஏற்பட்ட சலனம் அவளுக்கும் அடி மனதில் முன்பு ஏற்பட்டதை அவளை இங்கு மயக்கிகொண்டு வருவதற்குமுன் அவளின் வாய் வார்த்தையில் கண்டு கொண்டவன், ஒருவேலை தான் அன்பாக அணுகினால், தன் மேல் உள்ள அவளின் அபிமானம் வெளிவந்து அவளுடன் இளைப்பாரமுடிந்தால் என்ற எண்ணமே அவனை அவளிடம் தயக்கமின்றி அணுக வைத்தது
ஆனால் அவளின் உதாசீனம் ஏனோ அவன் எப்பொழுதும் கடைபிடிக்கும் பொறுமையை தகர்த்தெறிந்தது. அவளிடம் மட்டும் அவன் போடும் கணக்கு எல்லாமே தவறாக போவதாக ஆத்திரம் அவனுக்குள் விளைந்தது அவனின் பலகீனமாக யாழிசை இருப்பதாக தீரன் அந்த நேரம் உணர்ந்தான். அப்பலவீனத்தை விரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவன்.
எனவே கடுமையாக அவளிடம் வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பித்தான்.
ஹேய் லுக் திஸ்... என்றபடி அன்று காலையில் வெளிவந்த பிஸ்னெஸ் நியூசை வேகவேகமாக அருகில் இருந்த மேஜையில் இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து காண்பித்தான்.
அதில் தலைப்புச் செய்தியாக இன்று இந்திய சென்சஸ் புள்ளிகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருப்பதாக போட்டிருந்தது.
மேலும் ஒரு குறிப்பிட்ட நபரே இந்த மாற்றத்திற்கு காரணம். அந்த ஒரு நபர் வாங்கி குவித்த பங்குகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் அதன் உண்மைத்தன்மை பற்றி கேள்வி எழுப்பபடுவதாகவும் இருந்தது.
அந்த நியூசை வாசித்த யாழிசை குழப்பத்துடன் இதை போய் எதற்கு என்னிடம் இவன் காண்பிக்கிறான் என்று குழப்பத்துடன் ஏறிட்டு பார்த்த அவளிடம்.
ஏன் இதை உன்னிடம் காட்டுறேன் என்று உனக்கு புரியலதனே! சொல்கிறேன் அந்த சென்சஸ் புள்ளிகளின் ஏற்றத்திற்கு காரணம் டாப் டென் கம்பெனிகளின் மோஸ்ட ஷேர்ஸ் உன்னால் பர்சேஸ் செய்யப்பட்டதுதான்.
அவன் சொன்னதும் அவளின் அந்த சோர்விலும் ஏலனமான சிரிப்பை உதிர்த்த யாழிசை யாரு? நானு? சி.... பே! ஷேர்ஸ் வாங்குறதுனா எப்படின்னு கூட தெரியாது .சென்சஸ்... சென்சஸ்... சொல்றீயே அப்படினா என்ன என்பதையே ஒரு குத்து மதிப்பாத்தான் தெரிஞ்சு வச்சுருக்கேன். நான்போய் ஷேர்ஸ் வாங்கரேனும் அதுவும் இந்திய சென்சஸ் உலக அளவில் இதுவரை எட்டாத புதிய உச்சத்தை தொட்டுவிடும் அளவு வாங்கிருக்கேன்னு சொன்னா ஒன்னாங்கிலாஸ் பிள்ளைகள் கூட நம்பாது என்று சொல்லிவிட்டு என்கிட்டேயேவா புருடால் விடுற.... என்று மிதப்பான பார்வை பார்த்தாள்.
அவளின் அந்த ஆட்டிடியூடை கண்டவன் ஹஹஹா என்று வில்லன் சிரிப்பு சிர்த்தபடி ஒரு வீடியோ பதிவை அவளிடம் காண்பித்தான்.
அதில் அவள் வீட்டின் வாசலில் இரண்டு ஜீப்பும் கையில் பைலுடன் சில மனிதர்களும் வாசல் வரை சென்றதும் அவர்களை எதிர்கொண்டு சோகமே உருவான தோற்றத்தில் அவளது அப்பா கணேசபிள்ளை வாசலில் நிற்பதையும் பார்த்தவள் பரபரப்பானாள் .
யாரு அவங்க அப்பா ஏன் இவ்வளவு சோகமா இருக்காங்க? என்னனு சொல்லுங்களேன் என்று படபடத்தாள்.
அவங்க தமிழ்நாட்டு இன்கம்டாக்ஸ் ஆபீசர்ஸ். உன் வீட்டில் இன்கம்டாக்ஸ் ரைட் நடத்த வந்திருகிறார்கள் என்றான்.
என்னது எங்க வீட்டில் இன்கம்டாக்ஸ் ரைடா? என்றாள் யாழிசை.
பிறகு பல நூறு கோடி மதிப்பிலான ஷேர்ஸ் திடீர்னு பர்சேஸ் பண்ணினால் இன்கம்டாக்ஸ் விசாரணை வரத்தானே செய்வார்கள். .மேலும் அவங்க மட்டும் உன்னை தேடல அமெரிக்க டாப் பிஸ்னெஸ்மேன் பிராங்கின் அக்கவுன்ட் பணம் முழுவதும் இ பாங்கிங் மூலம் உன்னால் கொள்ளையடிக்கப்பட்டதை அவன் கண்டுகொண்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவ்வாறு கொள்ளையடித்தது நீ என்று சுமல் செய்யப்பட்டு அவனாலும் நீ தேடப்படுவாய்! என்றான்.
என்னது நான் கொள்ளயடித்தேனா? அதுவும் நெட் பாங்கிங் மூலமா? அய்யோ என்னை சுற்றி என்னதான் நடக்குது! என்னை எதுக்காக இப்படி சித்ரவதை செய்ற? என்று அவன் ஏதோ மர்ம கதை சொன்னதை போல் அதுவும் தன்னை மையமாக சுழலும் கதையாக அக்கதை இருப்பதாகவும் கண்டவள் அரண்டபடி கேள்வி எழுபினாள்.
லுக் பேபி... இதுதான் நிலைமை இதில் இருந்து நீ தப்பிக்கனும் என்றாள் நான் சொல்கிறபடிதான் நீ நடந்து கொள்ளனும் என்றான் தீரன்.
அவனின் அந்த பேச்சை ரசிக்காத யாழிசை, முடியாது... உன் மிரட்டலுக்கெல்லாம் பயந்து உன் கிரிமினல் வேலைக்கு என்னை பயன்படுத்தி கொள்வதை நான் அனுமதிக்க மாட்டேன் நீ சொல்வதை ஒருபோதும் நான் கேட்கப்போவது கிடையாது என்றாள் யாழிசை.
அவள் அவ்வாறு கூறியதும் உன்னுடைய இந்த முடிவால் உன் அப்பாவும் பாட்டியும் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் கூடவா? நான் சொல்வதை நீ செய்ய மாட்டாய்? என்றான் தீரன்.
அவங்களுக்கு என்ன பிரச்சனை கொடுப்ப என்று குரல் பிசுருதட்ட கேட்டாள் யாழிசை.
அவள் கேட்டதும் தீரன் அவளின் சோர்வினை மனதில் கொண்டு இதை முதலில் குடி அப்போதான் நான் உன் கொஸ்டியன்களுக்கு ஆன்செர் செய்வேன் என்று கூறினான்.