அவன் வெளியே செல்லவும், ஷ்யாம் மித்ராவைப் பார்க்க, அவள் சரவணன் சென்றதைக் கூடக் கவனிக்காமல், அவள் வேலையில் மூழ்கிவிட்டாள்.
ஷ்யாம் சிரித்துக் கொண்டே “ஹலோ, மேடம். கொஞ்சம் என்னைக் கவனிக்கிறீங்களா?” என்று கேட்டான்.
“என்ன கவனிக்கனுமாம்?
“உன் ஆபீஸ் வந்துருக்கேனே? ஒரு ஹாட் ஆர் கூல் ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணலாமே?
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“அது கஸ்டமருக்கு மட்டும் தான் ஷ்யாம் சாரே.. பொண்டாட்டிய பார்க்க வர புருஷனுக்கு எல்லாம் இல்லை”
“பாருடா. நான் உன்னைய பார்க்க வந்தேன்னு நினைச்சியா?
“வேறே எதுக்கு வந்தேனாம்”
“பாப்பா. அம்மாவைத் தேடி வந்துருக்கும்”
“பாருடா.. இந்த மேடம் கூட வளர்ந்துட்டாங்க. அம்மாவைப் பார்க்கிற சாக்குலே என் பொண்டாட்டியத் தேடியும் வந்துருக்கேன்” என, இருவரும் சிரித்தனர்.
பிறகு கிளம்பும் போது
“ஏன் மித்து? அந்த சரவணன் என்ன சொன்னான் என்று சொல்லவே இல்லையே?
சற்று யோசித்து விட்டு,
“அத்தான் , இதைப் பற்றி வீட்டில் பேசுவோம்” என,
“சரிடா. வீட்டில் பேசலாம்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
மாலையில் சீக்கிரம் வீட்டிற்கு வரலாம் என்று கிளம்பும் போது , சுமி போன் செய்து ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வந்து விட்டது வாங்கிக் கொள்ளுமாறுக் கூறினாள்.
சுமி முதலில் ஷ்யாமிற்கு ட்ரை பண்ணியிருக்க, அவன் போன் பிஸியாக இருக்கவே, மித்ராவிற்குப் போன் செய்து வர சொன்னாள்.
ஷ்யாம் மீண்டும் கூப்பிட்டு சுமியிடம் பேச, அவள் ரிபோர்ட் பற்றிச் சொன்னாள். அவன் தானே வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறியதை மித்ராவிடம் சொல்ல மறந்து விட்டாள் சுமி.
ஷ்யாம் முதலில் வந்து அவன் நண்பனிடம் பேசிக் கொண்டு இருக்க, சற்று நேரம் கழித்து வந்த மித்ராவும் ஷ்யாம் நண்பனயே தேடிச் சென்றாள்.
அவள் சுமி , ஷ்யாம் தானே இருக்கிறான் என்று கேட்காமலே சேகர் அறைக்கு மித்ராவை அனுப்பினாள்.
அவள் கதவைத் திறக்கும் போது
“மித்ராவிற்கு இருக்கும் பிரச்சினை அவள் வாரிசுகளுக்கும் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் சேகர்? “ என்ற வாக்கியம் கேட்க, இதே வார்த்தைகளைத்தான் சரவணன் அன்றைக்கு ரெகார்டிங்கில் கேட்ட நினைவு வந்தது மித்ராவிற்கு.
“வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.”
தொடரும்
{kunena_discuss:1187}