கீழ்வீட்டுப் பெண்மணி வெளியில் காலடி எடுத்து வைத்ததுதான் தாமதம் அவள் முதுகிலேயே கதவை அறைந்து சாத்திவிடும் வேகத்தில் சிவரஞ்சனியும் கதவை நெருங்கினாள்.
எதிரே வந்த கருப்பையாவை அந்தப் பெண்மணியால் எதிர்கொள்ளவே முடியவில்லை.
அவனும் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவளுக்குத் தேவையான அளவிற்கு அவனது மனைவி கொடுத்துவிட்டாள். அதுவே போதும்.
கதவைத் தாழிட வந்த சிவரஞ்சனி அந்த நேரத்தில் கணவனை எதிர்பாராததால் ஆச்சர்யமுடன் விழிவிரித்தாள்.
அவளைக் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைந்துவிட்டான்.
குளியல் அறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்தான்.
குளிக்கும் போதே மனைவியின் செயலை நினைத்துக்கொண்டுதான் குளித்தான்.
அவள் எப்படி சமாளித்தாள்?
இனி அந்தப் பெண்மணி ஏதாவது புறம் பேச என்று அவளிடம் வருவாளா என
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவிட வேண்டும் என்ற அவசரத்தில் குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. அவளைத் திட்ட மனம் வரவில்லை.
“ஏய் என்னாச்சு?”
மென்மையாகக் கேட்டான்.
அவள் பதில் பேசாமல் குளியல் அறையை நோக்கி கை நீட்டினாள்.
அங்கே என்ன இருக்கப் போகிறது?