(Reading time: 12 - 23 minutes)

சாத்விக் தன் தந்தை வசந்தனோடு பார்ட்டிக்கு வந்திருந்தான். அவனுக்கு தன் தந்தையோடு வருவதில் துளி கூட விருப்பமில்லை,

“நீங்க போங்க, நான் பின்னாடி வரேன்..” என்று வசந்தனிடம் சொல்லிப் பார்த்தான்.

ஆனால் அவரோ ஒத்துக் கொள்ளவில்லை, “வீரராகவன் நம்மள இன்வைட் பண்ணியிருக்காரு, அதனால நாம சேர்ந்து தான் போகணும்..” என்று தெளிவாக கூறிவிட்டார்.

அதனால் அவருடன் வரும்படியான சூழ்நிலை அமைந்துவிட்டது. அதற்கேற்றார் போல் உள்ளே நுழையும்போதே, வீரராகவனும் அவரது மனைவியும் சுஜனாவையும் அழைத்துக் கொண்டு வரவேற்க வந்துவிட்டனர்.

அதை கண்டு சாத்விக்கிற்கு எரிச்சலாக வந்தது. இப்படி ஒரு சூழலை தவிர்க்க தான் அவன் பார்ட்டிக்கு வருவதற்கே யோசித்தான். ஆனால் இதை தவிர்க்க முடியாது என்பதும் தெரியும், வேறுவழியில்லாமல்..

“ஹலோ சார்..” என்று அவருக்கு கைகுலுக்கினான்.

“என்ன சாரா.. மாமான்னு சொல்லுங்க சாத்விக்..” என்று சொல்லிவிட்டு வீரராகவன் சிரிக்கவும்,

“அதெல்லாமல் கல்யாணம் ஆனா தானா முறையோடு கூப்பிட வந்திடும்..” என்று வசந்தனும் சொல்லிவிட்டு சிரித்தார்.

அவர்கள் பேசுவது சாத்விக்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இதை இன்னும் அதிகம் வளரவிடக் கூடாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். இப்போதைக்கு இங்கிருந்து செல்ல வேண்டும் என்று அவன் நினைக்கும் போதே,

“ஹாய் சாத்விக்..” என்று பாலா அழைத்தான்.

“சரி நீங்க பேசிட்டு இருங்க.. இதோ வரேன்..” என்றவன் பாலாவை நோக்கிச் செல்ல,

“நீயும் மாப்பிள்ளை கூட போம்மா..” என்று வீரராகவன் சுஜனாவை பார்த்துக் கூறினார்.

வந்ததிலிருந்து சாத்விக் தன்னை பார்க்கக் கூட இல்லை என்பதை சுஜனா உணர்ந்திருந்தாலும், தந்தை சொல்லவே சாத்விக் பின்னாலேயே சென்றாள். தூரத்தில் பாலாவுக்கு அருகில் நின்றிருந்த அஜயும் அவர்களை தான் பார்த்திருந்தான்.

பாலாவும் அஜயும் மஞ்சுளாவின் குடும்பத்தாரோடு தான் நின்றிருந்தனர். உடன் மதுரிமாவும் புவனாவும் இருந்தனர். அவர்கள் அருகில் சாத்விக் வரவும்,

“சாத்விக் இது தான் விபாகரனோட பேமிலி, இவங்க அவனோட அம்மா, இவங்க விபாவோட சிஸ்டர், இவர் அவங்க ஹஸ்பண்ட் விஜய், நம்ம அஜயோட அண்ணா தான்..” என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தவன்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இது மது உனக்கே தெரியும், இவங்க என்னோட அம்மா..” என்று தன் குடும்பத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

பின், “சாத்விக்கை உங்களுக்கு தெரியாம போக வாய்ப்பில்லை, அதனால அறிமுகம் தேவையில்லை, இவங்க சுஜனா நம்ம சாத்விக்கை கல்யாணம் செய்துக்கப்போற பொண்ணு..” என்று அவர்களுக்கு சாத்விக்கை பாலா அறிமுகப்படுத்தவும், அப்போது தான் சாத்விக்கே சுஜனா தன்னோடு வந்திருப்பதை கவனித்தான். அந்த நேரம் இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்காததை குறித்து மிகப்பெரிய குற்ற உணர்வுக்கு ஆளானான்.

சாத்விக் திருமண செய்தி அனைவரும் அறிந்தது என்பதால் அதில் யாருக்கும் வியப்பு இல்லையென்பதால் சுஜனா தான் பெண் என்று தெரிந்ததில் அனைவரும் இருவரையும் வாழ்த்தினர். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தாலும், மஞ்சுளாவிற்கு மட்டும் மனம் சுணங்கியது.

சாத்விக் மேல் விருப்பம் இருந்ததால் தானே யாதவி தன் மகனை வேண்டாமென்று சொல்லிவிட்டுச் சென்றாள். அவள் சாத்விக்கை தேடித் தானே சென்றாள்? பிறகு அவள் சாத்விக்கை விட்டு எப்படி பிரிந்தாள்.

பார்ப்பதற்கு சாத்விக் நல்லமாதிரியாக தானே இருக்கிறான். பிறகு எப்படி யாதவியை அவன் ஏமாற்றினான். இப்போது யாதவி எங்கு இருக்கிறாள்.யாதவியின் மேல் உள்ள உண்மையான அக்கறையில் மஞ்சுளா மனதில் இந்த கேள்விகளெல்லாம் தோன்றியது.

இருந்தும் ஆரம்பத்தில் தன் மகனிடம் அவர் யாதவி எங்கு இருக்கிறாள்? ஏதாவது தெரிந்ததா? என்று கேட்பார். ஆனால் இப்போதெல்லாம் மகனுக்கு யாதவியை ஞாபகப்படுத்தக் கூடாது என்பதால் அவர் எதுவும் கேட்பதில்லை. ஆனால் அவன் யாதவியை மறந்தால் தானே ஞாபகப்படுத்த வேண்டும்..

இப்போதும் சாத்விக்கை விபாகரன் பார்க்கக்கூடுமே என்ற கவலை அவருக்கு இருக்க,

“ஆமாம் விபாகரன் சார் வரலையா பாலா.. அன்னைக்கு ஏர்போர்ட்ல கூட அவரோட ரொம்ப பேச முடியாமப் போச்சு, இன்னைக்கு அவர் வருவார் தானே..” என்று சாத்விக் சொல்லவும்,

“விபு சாத்விக்கை ஏற்கனவே பார்த்திருக்கிறானா?” என்று மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார்.

மையல் தொடரும்..

Episode # 08

Episode # 10

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.