"என்ன பொன்னி ஏதோ பேசனும்னு சொன்ன ஆனா ஒன்னும் பேசம என் முகத்தப் பாக்குறதும் அப்புறம் தரையப் பாக்குறதும்மா இருக்க. ஒன்னும் பேச மாட்டிங்குற"
"அது வந்து வெண்ணிலாம்மா"
"ஹூம் நீ வந்து போயின்னு இழுக்குறதுக்குள்ள வீடே வந்துருச்சு பாரு" என்றாள் வெண்ணிலா கௌவுதமின் பங்களாவைக் காட்டி.
"ஆமாம்மா. சரி நீ போ நான் நாளைக்குச் சொல்லுறேன்"
"இல்ல ஏதோ போசனும்னு வந்துட்டு பேசாமப் போனா எப்படி இரு நானும் உன்கூட குடியிருப்பு வரைக்கும் வரேன்" என்று கூறிவிட்டு பங்களாவின் வாச்மேனிடம் சென்று கௌவுதம் வந்துவிட்டானா என்று கேட்டாள் அவர் ஆம் என்றதும் "சரி அவர் என்ன பத்தி கேட்டா குடியிருப்பு வரைக்கும் போயிருக்கேன்னு சொல்லிடுங்க. கேட்டாச் சொல்லுங்க போன் பண்ணி சொல்ல வேண்டாம் புரியுதா" என்றுவிட்டு தன் கையி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தைய திருப்பிக்கொடுன்னு கேட்டா என்ன பண்றது. நீ என்னதான் அந்தப் பையன சட்டப்படி தத்து எடுத்திருந்தாலும் உன் தங்கச்சி உன்கிட்ட வந்து 'நான் பெத்த மகன எனக்கு திருப்பிக்கொடு'ன்னு அழுதா அத உன்னால தாங்க முடியுமா. அப்படி ஒரு நெலம வந்தா அது அந்தப் பையனையும் சேர்த்து உங்க எல்லாருக்குமே கஸ்டம்தான்"