"ம்ம்..."
"ஏன் பொன்னி உனக்கு உன் தங்கச்சி பையன மட்டும்தான் தத்து எடுக்கனும்னு ஏதும் எண்ணம் இருக்கா"
"அப்படியெல்லாம் இல்லம்மா. அவ கேட்காத வரைக்கும் எங்களுக்கு அந்த எண்ணமே இல்ல. அவ கேட்டதுக்கு அப்புறம்தான் நாம ஏன் தத்து எடுத்து வளர்க்கக் கூடாதுன்னு தோனிச்சு"
"அப்படின்னா அனாதை இல்லத்துள எத்தனையோ குழந்தைங்க அப்பா அம்மா இல்லாம ஏங்குறாங்களே அவங்கள்ல ஒரு குழந்தைய நீ ஏன் தத்து எடுத்து வளர்க்கக் கூடாது அப்பா அம்மா இல்லாத அந்தக் குழந்தைக்கு அப்பா அம்மாவா நீங்க ரெண்டுபேரும் கிடைச்சா அது அந்தக் குழந்தைக்கு மட்டுமில்ல உங்க மூனு பேருக்குமே சொர்க்கம்தான். அதுக்காக உன்ன உன் தங்கச்சிக்கு உதவி பண்ண வேண்டாம்னு சொல்ல நீ உன்னால முடிஞ்ச அளவுக்கு அவளுக்கு பண உதவி பண்ணு"
... e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page {kunena_discuss:1202}
This story is now available on Chillzee KiMo.
...