(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 19 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

நிலமகள் தன் அழகை தானே கண்டு ரசிக்கதான் ஆங்காங்கே மலையாக உருவெடுத்திருக்கிறாள். தன் மடியில் பூத்த மலர் கனி செடி கொடி என்னும் தன் மழலை செல்வங்களை மலை வடிவாக கண்டு ரசிக்கிறாள்.

மலையின் கம்பீர செருக்கை அவ்வப்பொழுது முகில்கூட்டம் இடிக்க முயன்று தோல்வியை காணும். ஆயிலும் அலைகளின் நிலதொடுதலைப் போன்ற தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே உள்ளது.

குளிரின் தாக்கத்தால் ஸ்வெட்டருக்குள் தன்னை ஒளித்துக் கொண்டார் பாடனிஸ்ட் பத்ரிநாத் கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் விடுவதும் பின்பு கைகள் இரண்டையும் உரசுவதுமாக நடந்தார்.

அவருடன் நடந்த ஆகாஷிற்க்கு சதுரகிரி மலையின் குளிர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. யு.எஸ்சில் மைனஸ் டிகிரி குளிரை கண்டவனுக்கு இதெல்லாம் சாதாரணம். இருவருமாக எதுவும் பேசாமல் நடந்தார்கள்.

“எக்ஸ்பைரி டேட்டே இல்லாத இயற்கைய  . . பிறக்கும் போதே எக்ஸ்பைரி டேட்டோட பிறக்கிற மனுஷன் அழிச்சி ஆள நினைக்கறத பாக்க வேதனையா இருக்கு” என பத்ரிநாத் வருத்தமாக பேச்சை தொடங்கினார்.

“பத்ரி சார் கவலை படாதீங்க . . இதுகெல்லாம் ஒரு முடிவு எடுப்போம்” ஆகாஷின் ஆறுதல் வார்த்தைகள் அவர் காதுகளை எட்டியதாக தெரியவில்லை.

சுற்றி இயற்கையை ரசித்தவருக்கு வேதனை பெருமூச்சு எட்டிப் பார்த்தது. “இவங்கள நான் சும்மாவிட மாட்டேன் . . இயற்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம் தெரியுமா? அதை பாதுகாக்காம வித்து பணம் செஞ்சி . .ச்சே ”  குமுறினார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நம்ம பிளான் நிச்சியமா வேல செய்யும்” என்ற ஆகாஷ் சுற்றி பார்த்துவிட்டு “நாம ரொம்ப நேரம் இங்க இருக்கிறது நல்லதில்ல” என விடைப் பெற்றான்.

“ஆகாஷ் நம்ம பிளான் வொர்க்அவுட் ஆகுமா?”

“கண்டிப்பா ஆகும் . . நீங்க தைரியமா நான் சொன்ன விஷயங்கள கரெக்ட் டைம்க்கு ரெடி பண்ணி கொடுங்க போதும். மத்த விஷயங்கள நான் பாத்துக்கிறேன்” என அவர் கைகளை அழுத்திபிடித்து உடல் மொழியாலும் தைரியம் சொல்லி கிளம்பினான்.

ஆசிரமத்தை அடைந்தான் ஆகாஷ். சுவாமிஜி ஆலமரத்தடி மேடையில் அமர்ந்து அன்றைய உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். மெய் மறந்து சிலர் கேட்டுக் கொண்டிருந்தார்.  தாடி தாத்தா உட்பட.. சுவாமிஜியை பார்த்த ஆகாஷ் “என்ன பெர்பாமென்ஸ்” என ஏளனமாக தனக்குள் சிரித்துக் கொண்டான்.

தானும் தாடி தாத்தா அருகில் போய் அமர்ந்தான். “இது தாடி தாத்தா இல்ல . .சாரு தாத்தா” என மனதில் நினைக்கும் போதே உடலின் ஒவ்வொரு நரம்பும் எலெக்டிரிக் வையராக மாறி இன்ப மின்சாரத்தை பாய்ச்சியது.

தாடி தாத்தா இவன் பக்கம் திரும்பாமல் உரையை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். இதை கண்ட ஆகாஷ் “ஆனாலும் உனக்கு கொழப்புடி . .என்னைவிட உனக்கு அந்த கிழவன் முக்கியமா”  என நினைத்தவன்.

“தாத்தா . . தாத்தா” என அவளுக்கு மட்டுமே கேட்கும் வகையில் மெதுவாக குழைவாக அழைத்தான். யார் காதில் விழுந்தாலும் தாத்தாவோடு அவன் பேசுகிறான் என்றுதான் நினைப்பார்கள்.

“என்னப்பா?”  என அவன் பக்கம் திரும்பாமல் தாத்தா வினவ

ஆகாஷ் அவர் தாடியை தடிவி தடவி பார்த்தான். அவர் இவனை திரும்பிப் பார்க்க அப்பொழுதுதான் உணர்ந்தான் அது சாரு இல்லை என்று. ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்த நொடியே “தாத்தா தாடில பூச்சி அதான் எடுத்துவிட்டேன்” என ஒருவழியாய் சமாளித்து அசடுவழிந்து அங்கிருந்து அவசரமாக கிளம்பினான்.

ஒருவேளை இவன் சொதப்பி இருந்தால் என்னவாகி இருக்கும்? இதயம் படபடக்க மாடிபடிகளில் ஏறினான். அதே படியில் மற்றொரு வயோதிகர் இருமிக் கொண்டபடி நின்றிருந்தார்.

இவன் அதையெல்லாம் கவனிக்காமல் ஏற “பேராண்டி கண்டுகாம போறியே” என அவர் கேட்க

இவனும் அவர் பக்கமாய் திரும்பி “குடிக்க தண்ணி வேணுமா?”  கேட்டுக் கொண்டே அவர் அருகில் போனான்.

வயோதிகர் அவனிடம் “இருமல் மருந்து வேணும்” என இரண்டுமுறை லொக் லொக் என இருமினார்.

வேண்டுமென்றே இருமவதுப் போல இருக்க ஆகாஷ் ஊன்று கவனிக்க அது சாரு என தெரிந்தது.

“ஏண்டி கெட்டப்ப மாத்திட்டே இருக்க . . இப்ப சொதப்பிட்டேன் தெரியுமா?” மெதுவாக பேசியவனை கேலியாக பார்த்து புன்னகைத்தாள்.

“என் ரூமூக்கு வா” என்றான்

“ போடா வேற வேல இல்ல” என கிளம்ப எத்தனித்தவள் கையை இறுக பற்றி “வாங்க தாத்தா இருமல் மருந்து தரேன்” என பெரியதாக பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.