(Reading time: 10 - 20 minutes)

நைட் டின்னர் சாப்பிட்டீயா மதும்மா.. இல்லை ஏதாச்சும் சாப்பிடு..” என்று அவளைப் பார்த்து கூறினான்.

“நான் சாப்பிட்டு தான் அங்கிருந்து கிளம்பினேன் ண்ணா.. இப்போ கொஞ்சமா பால் மட்டும் குடிக்கிறேன்..” என்றாள்.

“பால் தானே நான் சூடுபடுத்தி எடுத்துட்டு வரேன்..” என்று பாலா சமையலறைக்கு செல்ல,

“அண்ணா நானே சூடு பண்ணி குடிச்சிக்கிறேன்.. அப்படியே உங்களுக்கும் எடுத்துட்டு வரேன்.. குடிச்சா தூக்கம் வரும்..” என்று  சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று பாலை சூடுபடுத்தி இரண்டு டம்ளர்களில் ஊற்றிக் கொண்டு வந்தவள், ஒன்றை எடுத்து பாலாவிற்கு கொடுத்துவிட்டு, இன்னொன்ரை அவள் பருகினாள்.

“அண்ணி வீட்டு பிரச்சனையில்லைன்னா வேற என்ன யோசிச்சிட்டு இருந்தீங்க ண்ணா..” என்று பாலை பருகியப்படியே கேட்க, இதுதான் சமயம் விபாகரன் யாதவியை பற்றி சொல்லிவிட வேண்டும் என்று நினைத்த பாலா,

“எல்லாம் நம்ம தேவி பிரச்சனை தான் ம்மா.. பிரச்சனைன்னு கூட சொல்லமுடியாது, தேவியோட கடந்த காலத்தை பத்தி தெரிஞ்சா தானே, ஒன்னும் தெரியாம இருக்கிறது தான் இங்க பிரச்சனையா இருக்கு.. தினம் தேவி விஷயமா ஏதாச்சும் நடக்குது..” என்று கூறினான்.

“இன்னைக்கு சாத்விக் தேவி அப்பாவோட வந்து தேவியை கூப்பிட்டது  தானே ண்ணா.. பெரியம்மா எல்லாம் சொன்னாங்க.. சாத்விக்கிற்கும் தேவிக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கும் என்பது தானே உங்கள் யோசனை..” என்றுக் கேட்க,

“அடுமட்டுமில்ல விபாவுக்கும் தேவிக்கும் என்ன சம்பந்தம் இதுவும் அது கூட சேருது..” என்றதும் அவள் புரியாத பார்வை பார்த்தாள்.

பின் இன்று நடந்த விஷயங்களை பாலா தெளிவாக சொல்லவும், மதுரிமாவிற்கும் கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது. ஆனால் முழு விஷயத்தையும் அறியாமல் எதையாவது குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதால்,

“தேவி எல்லாம் தெளிவா சொல்ற வரைக்கும் நாம குழம்பிக்க வேண்டாம்னா.. அவக்கிட்ட நடந்தது என்னன்னு கேட்போம்..” என்று அவள் கூறவும்,

“நான் கேட்டுப் பார்த்தேன் மது.. ஆனா அவ எதுவும் சொல்லலை.. நீயாவது அவக்கிட்ட கேட்டுப்பார்..” என்றான்.

“நான் யாதவிக்கிட்ட நேரம் பார்த்து பேசறேன்.. நீங்க கவலையை விடுங்க..” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

“சரி ரொம்ப நேரமாச்சு  நீ போய் படு.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்..” என்று அவளை அவளது அறைக்கு அனுப்பியவன், பின் அவனும் தனது அறைக்குச் சென்றுவிட்டான்.

இரவு புவனா சொல்லவே சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டாலும் யாதவி ஒன்றும் சீக்கிரத்தில் உறங்கிவிடவில்லை. மதுரிமா வரும்போது கூட விழித்துதான் இருந்தாள்.

பாலாவும் அவளும் பேசிக் கொண்டதையும் அவள் அறிவாள். ஆனால் அவர்கள் பேசிக் கொண்டதையெல்லாம் அவள் கேட்கவில்லை. கார் வந்த சத்தம் கேட்டு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தவள், மதுரிமாவும் பாலாவும் பேசுவதை பார்த்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள். அவர்களும் அவள் வந்ததை பார்க்கவில்லை.

அதற்கு பின்னும் அவர்களும் படுக்கச் சென்ற பிறகும் கூட அவள் உறங்காமல் விழித்திருந்தவள், எதையெதையோ யோசித்தப்படி படுத்திருந்தாள். பின் அவளை அறியாமல் அவள் உறங்கும் போது நேரம் விடியற்காலையை தொட்டு இருந்தது.

அதனால் அவள் தாமதமாக தான் விழித்தாள். இருந்தும் படுக்கையை விட்டு எழாமல் படுத்திருந்தாள். ரூபினி அவள் அன்னை வீட்டில் இருப்பதால், யாதவியும் எப்போதும் போல் துடிப்பாக இருக்காமல் சோர்ந்து காணப்பட்டதால் புவனா காலையில் வெகு சீக்கிரம் எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது தான் எழ்ந்து வந்த மதுரிமாவை பார்த்து,

“நைட் எப்போ வந்த.. ஏன் என்னை எழுப்பல..” என்றுக் கேட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான் பெரியம்மா..” என்றவள், அவர் தந்த க்ரீன் டீயை வாங்கி பருகினாள்.

“தேவி என்ன இன்னும் எந்திரிச்சி வரலையா பெரியம்மா..”

“எங்க எப்போ பார்த்தாலும் ரூம்க்குள்ளேயே அடைஞ்சுக் கிடக்கிறா.. அவ மனசுல என்ன இருக்குண்ணே தெரியல.. எதுவும் சொல்ல மாட்டேங்கிறா.. இதுல அவளோட அப்பா வந்து அவர் கூட அவளை இருக்கச் சொல்றார்.. ஆனா அதுக்கும் அவ பயப்பட்றா..” என்று புவனா புலம்ப,

“நான் கால்ஷீட் கொடுத்தப்படி ஷூட்டிங் முடிச்சு கொடுத்தாச்சு பெரியம்மா.. இதோட அடுத்த கால்ஷீட் ஒரு மாசம் கழிச்சு தான், அதனால தேவியோட இருந்து அவளை பழைய தேவியா மாத்தறேன் ஓகே வா..” என்றவள்,

“சரி காபியை கொடுங்க தேவிக்கு கொடுத்துட்டு அவக்கிட்ட பேசிட்டு வரேன்..” என்று சொல்லி தேவியை பார்க்கப் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.