(Reading time: 10 - 20 minutes)

ப்போது தான் யாதவி எழுந்து குளித்துவிட்டு வரவும் மதுரிமா காபியோடு வரவும் சரியாக இருந்தது.

“குட்மார்னிங்..” என்று சொல்லியப்படியே மதுரிமா அறைக்குள் வந்தாள்.

“குட்மார்னிங் மது.. நைட் எப்போ வந்த?” என்று தெரியாதது போல் யாதவி கேட்டாள்.

“நைட் வரும்போது மணி பனிரெண்டுக்கு மேல ஆகிடுச்சு..” என்றப்படியே கையிலிருந்த காபியை மதுரிமா யாதவியிடம் கொடுக்க, அவளும் அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

“தேவியோட வழக்கமான சிரிப்பு மிஸ்ஸிங்.. எப்பவும் க்ரீன் டீயோட வந்து காலையில் என்னை எழுப்பும் தேவியை ரொம்பவே இன்னைக்கு மிஸ் பண்ணேன்..

அப்படி என்ன நடந்துச்சு, எதுக்காக என்னோட தேவி இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்கான்னு தெரியலையே..” என்று அவளாகவே பேசிக் கொண்ட மதுரிமா,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நீ எதை நினைச்சு இப்படி கவலைப்பட்றன்னு எனக்கு தெரியல தேவி.. உன்னோட கடந்த காலத்துல என்ன நடந்திருந்தாலும் உன்னை நாங்க விட்டுடமாட்டோம்.. ஆனா உன்னை திரும்ப சந்திச்சவங்க உன்கிட்ட அன்பா இருக்கப்போ, உனக்காக அக்கறை காண்பிக்கிறப்போ நீ எதுக்காக இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்கன்னு எனக்கு புரியல..” என்று அவள் இப்போது நேரடியாகவே தேவியை பார்த்துக் கேட்டாள்.

அதில் யாதவி மதுரிமாவை புரியாத பார்வை பார்க்க, “சாத்விக், விபாகரன் அப்புறம் உன்னோட அப்பா 3 பேரும் உன்கிட்ட அன்பும் அக்கறையும் தானே காட்றாங்க.. அப்புறம் அவங்களையெல்லாம் விட்டு இன்னும் நீ எதுக்கு ஒதுங்கி இருக்க நினைக்கிற..” என்று மதுரிமா நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எப்போது யாரையெல்லாம் சந்திக்க வேண்டாம் என்று நினைத்திருந்தாலோ, அவர்களையெல்லாம் மீண்டும் பார்த்தாளோ, அதுகுறித்து அவளின் கடந்த காலத்தில் என்ன நடந்திருக்கும் என்று இந்த வீட்டில் உள்ளவர்களின் மனதில் கேள்வி பிறந்ததோ, அப்போதே அனைத்தையும் இவர்களிடம் சொல்லிவிடுவது நல்லது என்று தான் யாதவி நினைத்தாள்.

நேற்று பாலா கேட்டபோதே சொல்லியிருப்பாள். ஆனால் அவன் ஆண் என்பதால் அவனிடம் சொல்ல தயக்கம் காட்டினாள். ஆனால் மது ஒரு நல்ல தோழி என்பதால் அவளிடம் தன் கடந்த காலத்தை சொல்ல நினைத்த யாதவி,

“என்னோட அப்பா இப்போ என்மேல பாசமா இருக்கார்னா அவருக்கு இப்போ என்னால ஏதாவது காரியம் ஆகத்தான் இருக்கும் மது.. அவரோடது போலியான அன்பு.

ஆனா சாத்விக் விபாகரனோட அன்பு உண்மையானது தான், ஆனா அவங்களோட அன்பை பெறும் தகுதி தான் எனக்கில்லை..

இப்போ நீ பார்க்கும் தேவி அன்பானவளா, பொறுப்பானவளா, பக்குவப்பட்டவளா இருக்கா.. ஆனா 17 வயது முடிந்து 18 வயது ஆரம்பிச்ச அந்த பருவ வயதில் யாதவி பொறுப்பில்லாதவளா, எப்போதும் அலட்சியத்தோட மத்தவங்களை மதிக்காத ஒரு பெண்ணாக தான் இருந்தாள்..” என்று சொல்லிக் கொண்டிருந்த யாதவி  கடந்த காலத்தை தன் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தாள்.

மையல் தொடரும்..

Episode # 15

Episode # 17

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.