"பிரபா சித்தப்பா உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சதுனால்தான் அப்போதே உன்னைப் பத்தியும், கௌதம் அங்கிளைப் பத்தியும் பேசியிருக்கிறார். அது இப்ப உண்மைன்னு நல்லாப் புரிஞ்சுப் போச்சு."
இப்போதுதான் குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது.
இப்போது போய் மகள் இப்படியெல்லாம் பேசினால் தேவையில்லாத மனவருத்தம் ஏற்படும். பிரபாகரன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு வந்திருக்கிறான். இப்போது அவன் அது பேசினான், இது பேசினான் என்று பேச்சு வந்தால், அதனால் மீண்டும் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம்.
மகளை நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது.
அவளைப் பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அவளது குடும்பத்தினர் அவளை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதினால்தான் அவள் தன்னை ஒதுக்குகிறாள்.
நல்லது. அப்படியே இருக்கட்டும். அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
்படியிருப்பவள் எதற்கு தன் தாயைப் பற்றி அவதூறாக அவளிடமே பேச வேண்டும்.
"மகா."
மென்மையுடன் கூறிக்கொண்டு அவளருகில் அமர்ந்தான்.
அவள் விசும்பினாள்.
"இங்கே நீதான் இப்படியிருக்கிறே. நீயும், உன் தம்பியும் சேர்ந்து ஏதோ பண்றீங்க. ஆனால் அங்கே அத்தை சந்தோமாதான் இருக்காங்க."