"இப்ப சொல்லு. ஏன் இப்படி பண்ணே?"
அவள் விசும்புவதை அவனால் தாங்க முடியவில்லை.
அவள் அழுது அவன் பார்த்ததில்லை.
எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வாள். எந்த நேரத்திலும் அவள் முகத்தில் இருந்த புன்னகை வாடியதில்லை.
இப்போது அவளை வாடிய மலராகப் பார்க்கும்போது அவனுக்கு மனம் வலித்தது.
அழும் அவளை அப்படியே தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
அவள் அழுது முடிக்கும்வரை பேசாமல் இருந்தான்.
"மகா. அப்படி அத்தையை விலக்கி வச்சிட்டு நீயும் சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியலை. ஏன் அப்படி பண்ணே? நீங்க ரெண்டு பேரும்தான் அவங்க உலகம்னு அத்தை வாழறாங்க. அப்படியிருக்கும்போதுஏன் இப்படி நடந்துக்கிட்டே."
"அதுக்காகத்தான் அப்படி நடந்துக்கிட்டேன்."
"எதுக்காக அப்படி நடந்துக்கிட்டே?"
...
This story is now available on Chillzee KiMo.
...
ு போல் எதுவும் இல்லை.
மற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் மருமகளிடம் தஞ்சம் கேட்டு வந்திருந்தாள்.
ஆனால் வசந்தா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
அவளுக்கு இயல்பாக மனிதாபிமானம் இருந்தது.
"சிவா. அவங்களை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துடு. நான் மாசாமாசம் பணம் கட்டிடறேன்."