அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் கண்ணீராக வெளியாகட்டும் என்று காத்திருந்தாள்.
மகள் இந்த மாதிரி நேரத்தில் தன்னை வருத்திக் கொள்வது அந்த தாயினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"மகா. இந்த மாதிரி நேரத்தில் உன்னை ரொம்ப அலட்டிக்கக் கூடாதுடா."
மகளை அணைத்துக் கொண்டாள்.
அவர்களை சாப்பிட அழைத்துச் சென்றாள்.
இருவருக்குமே உணவு இறங்கவில்லை.
மணமக்களை கௌதமின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
"வசந்தா. பிள்ளைங்கள் இன்னைக்கு அங்கே நம்ம வீட்டில் இருக்கட்டும். ராத்திரி சாப்பாடு கொடுத்து விடறேன்."
சொன்னவள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அங்கே எல்லாரும் காத்திருந்தனர். மகள் இருக்கும் நிலையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
க அவள்தான் கூட இருந்து பார்த்துக் கொண்டாள்.
அப்போதே வீட்டில் வந்து வேலைகளை எல்லாம் செய்திருக்கிறாள்தான். ஆனாலும் இப்போது வேறு நிலையாச்சே.
தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள்.
"பிள்ளைங்க இன்னேரம் தூங்கியிருப்பாங்கள்ல."
அவன் கேட்டான். அவள் தயக்கத்துடன் ஆமோதித்தாள்.