சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.
"களைப்பா வருது. தூங்கலாமா?"
அ வன் கேட்க அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவன் சிரித்தான்.
"ஏன் வசந்தா அப்படி பயத்தோடு பார்க்கிறே? காலையில் சீக்கிரம் எழுந்தது. அதனால் களைப்பா இருக்கு. உனக்கும் அப்படித்தான் இருக்கும். அதனால்தான் படுக்கலாமா? என்று கேட்டேன். அப்புறம் இன்னொன்றை தெளிவா நீ புரிஞ்சுக்கனும் வசந்தா. நாம ஒன்னும் இளவயதுக்காரர்கள் இல்லை. ஏற்கனவே திருமணம் செய்து வாழ்ந்து பார்த்தவர்கள்தான். என்ன ஒன்று? நம்ம துணை நமக்கு சரியா அமையலை. இப்ப உடலுக்குத் துணை தேவை என்பதை விட மனதிற்குத் தேவை. நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன். எப்போதுமே. நீ பயப்பட வேண்டாம். நம்ம குழந்தைகளுக்கு ஒரு நல்ல பெற்றோரா இருப்போம். அதற்கு மேல் எதுவும் வேண்டாம். ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதான் நான் நினைக்கிறேன். நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால் ஆதியோட அப்பா அவரைப் பத்தி ரொம்ப நல்லவிதமா பேசியிருக்கிறார். அதுதான் அவரோட பேரையே வைக்கலாம்னு நாங்கள் முடிவு பண்ணோம்."
அனைவரும் மகிழ்ச்சியுடன் அதை ஆமோதித்தனர்.
அன்றே மகாலெட்சுமியை அவள் வீட்டினர் அழைத்துச் சென்றுவிட்டனர்.