ஆரம்பிக்கக் கூடாது என்று அவர் கேட்க இல்லைப்பா என்னுடன் படிக்கும் பலருக்கு பணத்தேவை இருக்கிறது ஆனால் எனக்குக் கீழ் வேலை செய்பவர்களாய் அவர்களை நான் பார்க்க வேண்டாம் என்னைப் போல் பாட்னர்ஸ்சாகவே இருக்கட்டும் அது அவர்களுக்கும் எந்த மனக் கசப்பையும் தராதே.... அது கூட நாங்கள் 45% சேர்சை வெலி ஆட்களுக்கும் தருவதாய் உள்ளோம். எங்களின் வேலைக்கும் பங்கம் வராது, அதேபோல் பாதிக்கும் அதிகமான ஷேர்கள் எங்களிடம் இருப்பதால் பயம் ஒன்றாம் இல்லைப்பா.
என் ப்லான்னில் ஏதேனும் தவறு உள்ளதா என்று அவள் ஆதிகேசவணிடமே கேட்டாள். அமர் அப்பா மட்டும் இல்லை, அந்த வீட்டின் கடைசி மருமகளான வள்ளிகூட எந்த ஒரு முடிவாணாலம் ஒப்புதல் தர வேண்டும். அதை ஒரு மனதார நிறைவேற்ற வேண்டும்.
அம்முவின் ஆசைப்படி பாரதீஸ் ஆரம்பிக்க முடிவு செய்து விட, அவளுக்குத் தெரியாமலே அதன் வெளிநபர்களுக்கான ஷேர்களை வீட்டில் இருப்பவர்களே மொத்தமும் வாங்கிவிட்டனர். பௌவ் முன்னமே அதை ஆரம்பித்தவள் என்பதால் 20% ஷேர்களை பெற்றிருந்தாள். மிச்சமுள்ள 35 % சேர்களை நர்பர்களுடன் பகிர்ந்தமையால் அனைவரும் முதலாளி ஆனார்கள். அவள் இறுதியாண்டுக்கு அடி எடுத்து வைக்கும் சமயத்திலேயே பாரதீஸ் பொளிவுடன் ஆறம்பம்மானது. கல்லூரி முடிந்தவுடன் அவள் பாரதீஸ்க்கு சென்றுவிடுவாள.
நண்பர்கள் என்றால் வெறும் அவளுடன் பயின்றவர்கள் என்று இல்லை, அவள் மூத்தவர்கள், நண்பர்களின் நண்ர்கள் அவர்ளுக்கு தெரிந்த கஷ்டத்தில் இருக்கும் நபர்கள் என அனைவரையும் ஒரு வலிமையான அறனாய் மாற்றி பாரதீஸை நடத்தினர். அங்கு இந்தக் காலத்து உணவிற்கு நேராகப் பழைய தானிய வகையின் உணவுகள், பாட்டி காலத்து உணவுகளும் கிடைக்கும் படி பார்த்துக் கொண்டனர். பாரதீஸ் பிறபலம்மாக அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
அவள் கல்லூரி முடிக்கவும் அவர்களின் பாரதீஸ் எந்தத் தடங்களும் இல்லாமல் இயங்குவதை பார்த்து மகிழ்ந்தவள் தனக்கான வழியைக் குடும்பத்துடன் ஆலோசித்தாள். தனக்கு உடைகள் சமந்தமான தொழிலில் ஆர்வம் உள்ளதாகவும் அதற்காக தான் இன்னமும் முழுமையாக தயார்றாகவில்லை என்றும், இந்த வருடம் மேல் படிப்பிற்கு முயற்சி செய்வதற்குள் அதைத் தயார் செய்து விடுவேன் என்று கூருபவளை என்ன என்று சொல்வது.
அவள் கல்யாணத்தை பற்றிப் பெற்றவர்களும் பெரியவர்களும் பேச, அதற்கு நீங்களே தாயார் ஆகிக் கொல்லுங்கள் அது என் டிப்பார்ட்மெட் இல்லை என்று சொல்ல, முழித்த அனைவரையும் ஒதுக்கி, ஆதிகேசவன் தன் மகளை கட்டிக் கொண்டார். உனக்கு எப்படி மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லூடா செல்லம் அப்பா உடனே ரெடி என்று சொன்னதும் தான் பௌவ் சொன்னது அனைவருக்கும் விலங்கியது.
மாப்பிள்ளை பார்ப்பது உங்கள் வேலை என்று அவள் சொன்னது. சரி அவள் எப்படிப் பட்ட மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறாள் என்று அனைவரும் ஆர்வமாகப் பார்க்க, உங்கள் ஈஷ்வரிக்கு நீங்க எந்த ஈஷ்வரனை கொண்டு வந்தாலும் சம்மதமே. எம் பி ஏ படிக்கலாமென்று நெனச்சேன் நீங்க என்ன சொன்னாலும் சரிப்பா என்று முடித்துவிட்டாள். சாதாரண குடும்பத்தை சேர்ந்த கிராமத்து பெண்கள் கூட தங்களிள்ன் கணவன் இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்று சொல்கின்றனர் ஆனால் இந்தப் பெண் என்னவென்றால் உங்கள் விருப்பம் என்றுவிட்டாலே சரி நல்ல அவளுக்கு ஏத்த ஈஷ்வரனயே கண்டுபிடிப்போம் என்று தகப்பன்மார்கள் சொல்லத் தாத்தாக்கலோ உதட்டில் கள்ளச்சிரிப்புடன் வெளியேறினர்.
இப்படிச் சொல்லி அனைவர் மனதையும் குளிர்வித்த பெண் ஒரே வருடத்தில் கல்யாண பேட்சை எடுத்ததற்காக தன் உயிரையே விடத் துணிவாள் என்று இப்போது சொன்னால் நம்புவீர்களா... ஆம் செய்தாள் ஒரே வருடத்தில் கல்யாணப்பேட்சை எடுத்தற்காக தன் கையை அருத்து குருதி பொங்கிவழிய, மண்ணில் சரிந்தாள் அவள் முழு சக்தியையும் இழந்தவளாக. அவள் செயலைக் கண்டவர்கள் அனைவரும் திகைத்து ஒடிந்து போனார்கள் அவள் நிலையைப் பார்த்து.
அதன் பின் இன்று வரை யாருமே அவளை அதற்காக கட்டாயம் என்ன அதைப் பற்றி பேட்சைக் கூட எடுக்க வில்லை அவர்கள். அவளின் அண்ணன்கள் சந்தீஷ் ,கமலேஷ், சந்தோஷ, நிக்கேஷ் இவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது இந்த 3 வருடத்தில் மற்றும் இவளின் ஒரே தங்கையான நிவிஷா அவளுக்கும் போன வருடம் திருமணம் ஆகிவிட்து . பெரிய சண்டையும் மனக்கீரல்கலையும் தாண்டி இவள் அந்தக் கல்யாணத்தை நடத்தினாள். மாப்ள்ளைக்கு தன் தங்கையை பிடித்து விட்டதும் அவர் சற்றும் தாமதிக்காமல் வேலையை நடத்த, இங்கோ அக்காலுக்கு முன் அதெல்லாம் கல்யாணம் பண்ணமுடியாது அவ இப்ப தானே படிப்பை முடிக்க போறா என்று நிவிஷாவின் அன்னை வள்ளியே குருக்கே நின்றாள். அப்போதாவது தன் மூத்த மகள் திருமணத்திற்கு சரி சொல்ல மாட்டாலா என்று. ஆனால் அவள் பிடிவாதத்திலேயே கல்யாணம் முடிவானது. அவள் குடும்பம் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறுவதை பார்க்க மனம் வலித்தாலும் திருமணம் வேண்டாம் என்று 25 வயது வரை தன் நிலையிலேயே நின்றாள். சந்தீஷ்சுக்கு பெண்குழந்தை ஒன்று பிறந்திருக்கிரது போன வாரம்.
தாய் வழி தாத்தா பாட்டி இறைவனடி சேர்த்தனர் ஒரே நாளில். கல்யாணம் வேண்டாம் என்று அவள் முடிவாக சொனதுப் போல் குடும்பத்தை விட்டு சற்று தல்லி இருக்க