நேரம் ரசித்துப் பார்த்தும் பின் ஏக்கமாய் ஒரு நீண்ட மூட்சை வெளியிட்டவன் குட்டி எழுந்துக்கோடா என்று பூபோல் அவளைத் துயில் கலையச் செய்தான். அவள் கண் முழித்து யேதோ அர்ஜென்டா கண்டத்தில் இருப்பவள் போல் முழிக்கவும் அவளை தன்னிடம் இனனுமாய் இறுக்கி என்னடி லுக்கு இது 11 மணிநேரம் என் மேலையே சாஞ்சி ஜம்முனு தூங்கிட்டு வந்ததும் இல்லாமல் இப்போது எந்நடி முழி இது என்று அவளை மிரட்டுவது போல் இருந்தாலும் அவளை மென்மையாய் வருடி அவள் கலைந்து கிடந்த தலைமுடியை சரி செய்து அவள் நெற்றியில் செல்லமாக முட்டினான்.
அத்தர்க்குள் ஆதி கார் அருகில் வர, பௌவ்வின் சித்தப்பாக்கள் டிக்கியில் இருந்த பெட்டிகளை பொருட்களை எடுத்தனர். வேலையாள்கள் அதை வாங்க வர அவர்களை உள்ளே எடுத்துச் செல்ல பணிந்த பின்னே பௌவ்வியை இரங்க அனுமதித்தான் ஈஷ்வர். அவள் இருந்த நிலை அப்படி. இரவு உடையுடன் ஜொரத்தில் சொங்கிப்போய் புது மனிதருடன் வருபவளைக் காண்பவர்களின் கண்களும் வாய்களும் சும்மா இருக்குமா என்ன?
அவள் இரங்கியதும் அவள் இரு சிதப்பாக்ளும் அவளைக் கண்டு மனதார வருந்தி அவள் நலனைவேண்ட, ஆதியோ வாங்கத் தம்பி என்று ஈஷ்வரை வரவேற்றார். அப்போது தான் அவனை கவனித்த ஆதி அருள்ளின் இரு சகோதரர்களும் அவன் பரணி மாமாவின் உறவினன் என்பதை நொடியில் கண்டுகொண்டனர். ஆனால் அவன் தான் தங்களின் மூத்த மகளின் வருங்கால கணவன் என்றோ, தங்கள் பார்வதி அண்ணியின் அண்ணன் மகன் என்றோ அரியவில்லை. தம்பியின் கல்யாணத்திற்கு கூட அவன் முன் நிற்கவில்லையே, நின்று அறிமுகப்படுத்தவும் அவன் யாருக்கும் நேரம் கொடுக்கவில்லை.
வாங்கத் தம்பி வாங்க என்று வரவேற்றவர்களைப் பார்த்து சிரித்தவன் கவனம் மட்டும் தன்னவள் மீதே இருந்தது. அவள் அணிந்திருந்த சிகப்பு நிற பணியனும் முக்கால் பேண்டும் அவள் இப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்தாள் என்பதை உணர்த்தச் சற்று சோர்ந்து இருக்கும் நிலையிலும் ஜொலிக்ராயா என்று மனதில் கூறியவன், அவள் கொஞ்சம் தள்ளாடுவதுபோல் தோன்ற சற்றும் தாமதிக்கால் அவளை நெருங்கினான்.
ஆதித் தன் மகளை அணைத்தபடி இன்னும் முடியலையா குட்டிம்மா என்று பரிவாக அவள் தலையை கோதினார். ஆதிப்பா தாத்தா எங்கே என்றாள். அவள் கேள்விக்கு பதில் வரும்முன் சிவமா வரத்துக்குல்ல நான் உள்ளபோய்டுரேன்பா என்று அவள் அறையைக்கு நகர்துவிட, ஈஷ்வர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு ஹால்லில் அமர்த்தப்பட்டான். வீட்டின் 3 மறுமகள்களையும் பார்தாய்யிற்று. இரண்டு பேரப்பிள்ளைகளையும் பார்த்தாயிற்று. அனைவருக்கும் சிறந்த தொழிலதிபராகவும், மாமா மகன் என்று மட்டுமே அரிமுகப்படுத்தப்பட்டான ஆதியின் மூலம்.
அனைவரும் சில நிமிடங்கள் பேசியபடியும் உபசரிப்பிலும் இருக்க மெல்லிய கொலுசொலியுடன் ஒப்பனையில்லா இயற்கை அழகில் மின்னும் முகத்தோடு கைதரிபட்டில் பாடருன் சிகப்பு நிற பருத்தி சேலையில் நின்றவள் பௌவ் என்பதை செல்லிதான் ஆகவேண்டுமோ?
என்றுமே உன் காதலி கண்ணமா