பாயில் மித்ரூ படுத்து விட பக்கத்து பாயில் அவள் மாமன் மகன்கள் வருசையாக படுத்து விட்டனர். சுமார் எழுபது நிமிடம் பேசிவிட்டு படுக்கவந்தவனுக் இப்போது இடம் இல்லை. எனவே பௌவ்வின் பாயிலேயேதான் படுக்க வேண்டும.
அவன் வந்து இவள் அருகே அமர்ந்துபார்தான்... நன்றாக உரங்குகிறாள் அவன் தேவதை.
அடியேய் இனைக்கு என்ன நாள் இப்படி கும்பலில் படுக்க ஆசைபடுர... சரி நீயும் நானும் மத்தவங்கமாதிரி ஒரே தலையனையில் படுக்கலானு பார்த்தால் இங்க தலையனைக் கூட இல்லை. இந்த மித்ரூாஅதை கட்டி பிடித்துக்குட்டு தூங்குரான் . நான் என்ன டி செய்வேன் என்று அவன் கேட்கவும்... ஈஷூ மாமா என்று தூக்கத்தில் அவள் அழைப்பதர்க்கும் சரியாக இருந்தது.
தூக்கத்தில் கூட உனக்கு நான் தெரிகிறேனா டி குட்டிமா....
நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்தவன்....
எவ்வளவு உடல்நலம் சரிஇல்லாமல் இருந்தாள். அவள் உடலுக்கும் மனதிர்க்கும் தெம்பு வேண்டும் என்றால் அவள் நன்றாக தூங்க வேண்டும். அவளுக்கு தலையனைக்கூட இல்லை என்று அவன் யோசித்து அவள் தலையை தூக்க ... இவன் கையை பிடித்து அனைத்தபடி படுத்துவிட்டாள்.
அவள் அருகில் இவனும் படுத்துக்கொல்ல இப்போது நன்றாக அவனை அனைத்துக் கொண்டு தலையை அவன் மர்பின் மேல் தாறாலமாக வைத்தபடி நிம்மதியாக தூங்கிப் போனாள்.
அழகு தேவதை மானைவியாகி... அவள் தன் மேல் எல்லையில்லா காதலை வைத்து இருப்பதும்... இங்கே ஒரு பட்டாளமே அவளை தேவதையாய் கொண்டாட ... அவள் மேல் இருக்கும் அன்பு தன் மீதும் காட்டும் குடும்பம்.. எல்லாமே ஆச்சரியம் தான்.
தன் கனவில் மட்டுமே காட்சியலிக்கும் இந்த அழகான ராட்சசி இப்போது நேரில்... அதுவும் தன் மாற்பு மீது சௌகரியமாக சாய்ந்து படுத்துக் கொண்டு தூங்குகிறாள். மனது நிறைய நிம்மதிதான்... இரண்ட நாள்ளுக்கு முன் வரை ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றும் அவன் தூங்கும் போதெல்லாம்.
அது இப்போது இல்லை அவனுக்கு.
காலை ஒவ்வொருவராக எழுந்து எழுந்து வர அனைவரின் முகத்திலும் சரிப்பு தான்.
குடும்ப மக்கள் அனைவருக்கும் சந்தோஷம்.
மித்ருன் வந்து எழுப்பும் வரை கணவனின் மார்பில் தூங்கியவள் அவன் அழைத்ததும் எழுந்து பார்க அவள் இருந்தக் கோலம் வெட்கத்தைக் கொடுக்க எழுந்து தன் அறைக்குல் சென்றுவிட்டாள்.