தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 26 - கண்ணம்மா
கணவன் தோலில் சாய்ந்துக் கொண்டவள் தூங்குவதுப் போல பாசாங்கு செய்தாலும் மனதில் ஒரு கலக்கம் அவளை நிம்மதி இழக்க செய்தது . அவள் தூங்கவில்லை தன் அருகாமைக்காகவே சாய்ந்து இருகிறாள் என்பதை உணர்ந்தவன் தன் வலதுக்கையை அவளைச்சுற்றி அனைத்தபடி கண்மூடி சாய்ந்துவிட்டான்.
சற்று நேரத்தில் இருவரும் அயர்ந்து தூங்கிவிட.... மித்ருனும் நந்தனும் பின் சீட்டைப்பார்த்தனர். பிச்சைகாரன் ஏதோ பல நாள்க்கு பிரகு கிடைத்த சோறை பார்பவர்கள் போல் ஆகிவிட்டனர் இருவரும்... வெரிக்க வெரிக்க இருவறும் பார்தனர் ஒருவன் மற்றவன்னும் தன்னைப்போலவே பார்பதை பார்த்ததும் தன் இயல்பாய் சிரித்துவிட இலையவர்கள் மனதில் சந்தோஷம் நிறைந்தது.
(அப்படி இதுக இரெண்டும் சேர்ந்து என்னதான் செய்து வச்சிருக்குங்க எனபதுதான் புரியல... பார்க கரடு முரடா தெரியலனாலும் ஈஷ்வரின் முகம் சாமணியம் கிடையாது தான். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் தன் உயிரையே வைத்திருக்கும் பௌவ் அப்படி என்ன தான் செய்து வைத்திருப்பாள் இவர்கள் அனைவரின் மனதை கலக்கம் கொல்ல செய்திருக்கிறாளே...
தூக்கம் கலைந்து எழுந்த பௌவ்வும் சரி ஈஷ்வரும் சரி ஒருவரை மற்றவர் விலகாமல்லே இருந்தனர். கொஞ்சம் கூட சலிக்கவே சலிக்காதவர்கள் போல் இலையவர்கள் இறுவரமே அதனை பார்த்து பார்த்து பூரித்தனர். இடையில் வண்டியின் ஸ்டேரிங் மித்தூருன்னிடம் இருந்து நந்தனிடம் சென்றது உணவுக்காக நிருத்தினர் , இரண்டுமுறை காப்பி வாங்க நிருத்திய சமயத்தில் கூட ஈஷவரின் கையை விடாமல் பிடித்தபடியேயும் அவனை ஒட்டியபடியே இருந்தாள் பௌவ்.
வீடு வந்தது ...
மித்தூ வீடு... கணி அத்தை வீடு ... கமல் மாமா வீடு... என் தங்கை மருகளாக வாழும் வீடு.... எனக்கும் அப்படி தான் ஆனால் முன்பு வெலிப்படையாய் யாரிடம் சொல்லமுடியும்? இப்போது அப்படியில்லவே , பௌவ் ஈஷ்வரின் கையை பிடித்தபடி உள்ளே செல்ல அங்கே அவளின் ரசிகைமண்றம் தயாராய் இருந்தது வேரவேற்க்க.
அனைவரின் ஆசியையும் வாழ்த்தையும் பெற்றவர்கள் அறைக்கு செல்ல அதே நேரம் அவன் கைபேசி அலரியது.
அடசே.... இதை கண்டுபித்தவனை கானாமல் செய்துவிடுவேன் கையில் அவன் மாட்டினால் என்று புலம்பாயபடியே கையில் எடுக்க முகம் தீவிரம் ஆனது.
ம்ம்ம்.... சொல்லு டா..