(Reading time: 7 - 13 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அவனுக்கு மறுத்து விட்டது. குழந்தைகள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருந்ததை தவிர அவ் வேறு எந்த தவறும் செய்ய வில்லை." என்று ஆரம்பித்து க்ருபாவின் கதையை சொன்னார்.

அதனை பொறுமையாக கேட்ட அதிரதன் பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தான்.

" வெல்உங்கள் க்ருபாவிற்காக நீங்கள் சில விஷயங்களை செய்தீர்கள்…. அபிக்காக என்னை மரபணுவியல் படிக்க வைத்தீர்கள்அதிதியை திருமணம் செய்ய வைத்தீர்கள். இது நேர்மையான கதையாப்பா?. "

"சத்தியமான கதை ரதன். மரபணு படிக்க சொல்லி உன்னை நான் கட்டாயப்படுத்தியதில்லை. உனக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம்அந்த பாதையில் நீதான் பயணித்தாய்நீ ஒரு விஞ்ஞானி ஆகும்வரை நான் இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தேன்…."

"சரி.. எனக்கும் அதில் ஆர்வம் இருந்தது. இப்போ அபிதாவின் கதையை கேட்கும்போது எப்படியாவது உதவணும்னு தோணிடுச்சு. தட்ஸ் ஓகே. ஆனால்…"

"ஆனால் என்ன?"

"அதிதியை திருமணம் செய்ய வைத்தது எவ்வளவு பெரிய வில்லத்தனம்…?  கல்யாணம் ஆன நாள்லேருந்து இடியாப்ப சிக்கல்தான்ஏன் அப்படி செஞ்சீங்க?"

"அது என்னோட ப்ளான் இல்லை. உங்கம்மா விருப்பப்பட்டு செஞ்சது."

"இப்ப அம்மா பக்கம் திருப்பிட்டீங்க. அவங்க அப்படி நினைக்ககூட மாட்டாங்க. உனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவளையே கல்யாடம் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லியிருந்தாங்க. அவங்க அதிதியை சாய்ஸ் செய்திருந்தால் அப்படி சொல்லி இருக்க மாட்டாங்க."

" ஆரம்பத்துல அப்படி சொல்லியிருக்கலாம். அப்புறமா அவளுக்கு ஒரு பயம் வந்துடுச்சு."

"எதை பற்றி…"

"யாரைபற்றிணு கேளுஅந்த ஜெனிட்டா பொண்ணு இறந்து போனப்ப நீ ரொம்பவும் அப்செட் ஆகியிருந்தியே அப்போது வந்தது பயம்"

"?"

"க்ருபா மாதிரி நீயும் ஆகிவிடக் கூடாதுன்னு அவள் பயந்து போனாள்"

"வாட்…? நான் ஏன் அங்கிள் மாதிரி…?. மை காட் நான் ஜெனிட்டாவை காதலிச்சேன்னு நினைச்சீங்களா?. ரப்பிஷ்"

"வேற எப்படி தோணும் ரதன்?. அவள் இறந்த போது நீ நிலை குலைந்து போயிருந்தாயே"

"அதுக்கு காதல்தான் காரணமாக இருக்கணுமா?. என்னோட அஸிஸ்டெண்ட் திடீரென செத்து போனால்.. என்ன ஏதுன்னு ஒரு குழப்பம் வராதா? மேலும் அப்போது நான் ஒரு முக்கியமான

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.