'என்னால் உங்களுக்கு உண்மையாக இருக்க முடியாது போல…' ஜெனிட்டா சொன்ன வார்த்தைகள் அவனுக்கு இப்போதும் கேட்டது.
"அவள் நெருக்கடியில் இருப்பதை உணர்ந்து நான் சுதாரித்து இருக்க வேண்டும்… திடீரென ஒருநாள் தற்கொலை செய்து கொண்டாள்… அதுதான் என்னை பாதித்து விட்டது. அவளுடைய இறப்பு தற்கொலை அல்ல என்று தோன்றியது. இன்னமும் அந்த மர்மத்தை தீர்க்க முடியவில்லை."
"உண்மையை எப்போதும் மறைத்து வைக்க முடியாது ரதன்… ஜெனிட்டாவின் இறப்பிற்கான காரணம் சீக்கிரமே வெளிவரும்."
"வரணும்ப்பா… அப்போது தான் அவளுடைய ஆத்மா அமைதியடையும்"
"சரி… இப்போது சொல்லு… உன்னால் அபியை சரி செய்ய முடியுமா?"
கங்காதரன் ஆர்வமாக கேட்டார். அதிரதன் அவரை கூர்ந்து நோக்கினான்.
"அது ரொம்ப சுலபமான விசயம் இல்லை. ஆனால் முயற்சி செய்வேன். ஏனெனில் நானும் ஒரு விஞ்ஞானி தான். அபிதாவிற்கு நேர்ந்தது என்னுடைய தொழிலுக்கான களங்கம். அதை சரி செய்யும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.. ஆனால்… "
"என்ன?"
"அதற்கு முன் அபிதாவை மனதளவில் தயார் செய்ய வேண்டும். அதற்கான சாவி அதிதியிடம் இருக்கிறது. முதலில் அதிதியை சைக்கலாஜிக்கலாக தயார் செய்ய வேண்டும்."
தொடரும்