தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 22 - சாகம்பரி குமார்
அதிரதன் உறங்க ஆரம்பித்த அதிதியை கவலையுடன் பார்த்தான். அவளுக்கு மூளையை பாதிக்கக்கூடிய மருந்து செலுத்தப்பட்டு இருக்கிறது. கண்டிப்பாக அந்த லட்டுதான் அந்த வேலையை செய்து இருக்கும். லேப் ரிப்போர்ட் வந்தால் தெரியும்.
அதே சமயத்தில் அதிரதனின் அப்பா கங்காதரன் தாதிபட்டிக்கு கிளம்பி வந்து கொண்டு இருந்தார். உண்மையில் அவர் ப்ரூனோ என்ற க்ருபாவை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தார்.
க்ருபாவின் தண்டனை காலம் முடிய போகிறது போல… அவருடன் அபிதா பேசி விட்டாள். அவள் அவரை புரிந்து கொண்ட நிம்மதி க்ருபாவிடம் தெரிந்தது.
கங்காதரனுக்கு மைத்துனன் மீது ஒரு கவலை கலந்த இரக்கம் உண்டு. என்ன ஏது என்று தெரிந்து கொள்ளும் முன் க்ருபாவின் வாழ்க்கை இருண்டு போனது…
திருமணம் செய்யும்போது கற்பகத்தைவிட க்ருபாதான் அவருக்கு அதிக பரிச்சயம். க்ருபாவின் காதல் தோல்வியில் இருந்தது அவனை மீட்டு புதிய வாழ்க்கையை அமைத்து தர திட்டமிட்டு அவனை ஜெர்மனியில் இருந்து அவர்தான் வரவைத்திருந்தார்.
ஆனால் இங்கே வரவும் அவன் துளசி-சுந்தரம் வாழ்க்கையை சீரமைப்பதில் மும்முரமாகி விட்டான். இறந்து போன காதலியின் நினைவில் இருந்து அவன் மீண்டு கொண்டு இருப்பதாக நினைத்ததால் அவரால் க்ருபாவினை தடுக்க முடியாமல் போனது.
இறுதியில் துளசியின் வாழ்க்கையை அழித்த விதி க்ருபாவின் வாழ்க்கையையும் உறை நிலையில் நிறுத்தி விட்டது. சிரிப்பில்லை… பேச்சில்லை… அபியையும் அதிதியையும் தவிர வேறு நினைவில்லை… தன்னை சுற்றி ஒரு உலகம் இருக்கிறது என்பதையே மறந்து போய் விட்டான்…
அவனுக்கான வாழ்க்கை பாதை மூடி விட்டது. இல்லை… இல்லை… அவனே மூடி விட்டான்.!.
தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வேதனையில் இருந்த க்ருபாவையும் அண்ணனால்தான் துளசியின் குடும்பம் அழிந்தது என்று மனதளவில் சிதைந்து போன கற்பகத்தையும் தேற்றும் வழி தெரியாமல் தவித்தார்.
மிகுந்த சிரமமெடுத்து அதிதியின் தாத்தா சண்முகத்தை சமாதானம் செய்தார். நடந்தவற்றை அவருக்கு புரிய வைத்தார். அபிதா அதிதியின் எதிர்காலத்திற்கு க்ருபாவை பொறுப்பேற்க ஒப்புக் கொள்ள வைத்தார்.
அத்துடன் நிற்காமல் அதிரதனை மரபணு அறிவியல் படிப்பில் சேர்த்தார். அவனுக்கும் அறிவியலில் விருப்பம் இருந்ததால் ஆராய்ச்சியாளாக மாறினான்.
அவரே எதிர்பாராமல் நடந்த விஷயம்… அதிரதன் -அதிதி திருமணம்தான். அது கற்பகத்தின்