விருப்பம். அம்மாவின் விருப்பம் அறிந்து அதிரதனும் அதிதியை திருமணம் செய்து கொண்டான். இருவரின் குணநலனும் சூரியன் சந்திரன்போல இருந்தாலும் விருப்பு வெறுப்பை தாண்டி அவர்கள் மனதாலும் இணைந்து விடுவார்கள் என்று நம்பினார்.
அவருக்கு கவலை அளித்த விஷயம் அபிதாவின் வாழ்க்கை!. அவளை சரி செய்ய அறிவியல் முயற்சியுடன் அவளுடைய ஒத்துழைப்பும் தேவை. அவளோ யாரையும் நம்பவில்லை. அதிதியிடம் மட்டும் பிரியமாக இருந்தாள்.
இரண்டொரு முறை முயற்சி செய்தும் சண்முகம் தாத்தாவால் அவளுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் அபியை அடையாளம் கண்டு கொள்வதை தவிர்த்து விட்டாள். அவளுக்கு பிடிக்கவில்லை என்பது புரியவும் தாத்தாவும் அவளை ஒரு அமானுஷ்யம்போல கருதி அமைதி காத்தார். அவர் இறக்கும்வரை இதுதான் தொடர்ந்தது.
யாருடனும் பழக விரும்பாத அபிதா இப்போது மனம் இரங்கி வந்திருக்கிறாள். க்ருபாவின் முழு கதையையும் கேட்டிருக்கிறாள். அவனை புரிந்து கொண்டிருக்கிறாள். இனி அவளுக்கான ஆரம்பங்களை முன்னெடுத்து செல்ல முடியும்.
க்ருபாவிடம் தனியே சென்று பேசிவிட்டு தாதிபட்டிக்கு சென்றார். அதிதியும் ரதனும் எப்படி இருக்கிறார்கள் என்று கற்பகத்திடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
ம்… இப்போது கற்பகத்திற்கும் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. காலம் கனிந்து வந்தால்தான் நல்லது நடக்கும் போல… அதுவரை காத்திருப்பது ரொம்ப முக்கியம்.
தாதிபட்டிக்கு கங்காதரன் வந்தபோது அங்கு ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்தது.ஊர் பஞ்சாயத்து பேசும் அம்மன் கோவில் வேப்ப மரத்தடியில் ஊர் கூட்டம் கூடியிருந்தது. அங்கே என்ன விஷயம்?
அருகே செல்லவும் ஊர் தலைவர் அவரை வரவேற்றார்.
"வாங்க சார். அதிதியை பார்க்க வந்தீர்களா?"
"ஆமாம் என் மருமகளும் மகனும் எப்படி இருக்கிறார்கள்?"
"நானும் வரேன் ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம். அதுக்குள்ள ஒரு பஞ்சாயத்தை முடிச்சிட்டு போகலாமா?"
"சரி தலைவரே… நானே கேட்கனும்னு நினைச்சேன். யார் அவன்? எதுக்கு கட்டி வச்சிருக்கீங்க?"
"யார்ணு தெரியல… இனிமேதான் விசாரிக்கணும். நம்ம சம்பத்துதான் கட்டி வச்சிருக்கான். மாப்பிள்ளையும் சேர்ந்துதான் பிடிச்சாங்களாம்."
"அதிரதனையா சொல்றீங்க.. அவனுக்கு இவனுக்கும் என்ன பிரச்சினையாம்?"
"இந்த தடியன் அதிதி வீட்டுக்கு பக்கத்துல சுத்திட்டு இருந்திருக்கான். காலைலேயே