Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche - Tamil thodarkathai
Marulathe maiyathi nenche is a Romance / Family genre story penned by Sagampari Kumar.
This is her sixth serial story at Chillzee.
மருளாதே மையாத்தி நெஞ்சே…
இதுதான் நான் எழுதப் போகும் புதிய தொடரின் தலைப்பு.
மருள்- மருட்சி என்று கொள்ளலாம். அப்படி என்றால் பயம். மையாத்தி- மயக்கம் என்பது பொருள். இன்னும் சொல்லப்,போனால் பொலிவிழந்து போகுதல்… இருள் சூழ்தல்… தெளிவில்லாமல் இருத்தல்… என்றும் கொள்ளலாம்.
‘மலர் காணின் மையாத்தி நெஞ்சே!’ இது குறள் வாக்கியம்… பூக்களை பார்க்கும் போதெல்லாம் தலைவியின் கண்கள் என்று மயக்கம் கொள்கிறாய் மனமே என்கிறார். மனதில் அப்படி ஒரு குழப்பம்…!
சரி, நம்ம கதையில் என்ன ஆகப் போகிறது? எதையோ நினைத்து மயங்கி நிற்கும் இந்த நெஞ்சம் ஏன் மருள்கிறது? சில விசயங்கள் தெளிவில்லாமல் போகும்போது தவறான மாயையில் அகப்பட்டுக் கொள்ளும் இந்த மனம்… ரொம்பவும் மோசமான விளைவுகளை எதிர்பார்த்து பயப்படும். அந்த பயம் உண்மையை மறைக்கும்!
ஆஹாங்… தலைவி எதையோ தவறாக புரிந்து கொண்டு தலைவனை ‘வறுத்து… பொரித்து… அரைத்து.. எடுக்கும் கதைதானே என்று ஒரு முடிவிற்கு வந்திருப்பீர்கள்.
நோ… நோ.. அப்படியெல்லாம் ஒரு முடிவிற்கு வந்து விடாதீர்கள். மருட்சி… மையாத்தி என்றாலே பெண்மை சார்ந்த சொல்லாகி விடாது. அப்ப தலைவன்தான் அந்த அக்யூஸ்டான்னு முடிவிற்கும் வந்திடாதீர்கள்…
இரண்டு பேரும் மாறி மாறி குழப்பிக் கொண்டும் அடுத்த அடியை எடுத்து வைக்க பயந்து கொண்டும் கதையை நகர்த்த போகிறார்கள்.
அத்துடன் டிஎன்ஏ… ஜீன்… குரோமோஸொம்கள் இவற்றுடன் ‘நாம்’ எப்படி எல்லாம் மாற்றத்திற்கு… கரெக்சன் ப்ளீஸ்… எதிர்பாராத மாற்றங்களுக்கு உள்ளாகிறோம் என்பது பற்றி கொஞ்சம் பேசலாம்
அப்புறம் மரபணுவியலில் நடக்கும் வியாபார அடாவடிகளையும்… (பயமுறுத்தல்கள்)… நியாயமான (பரி)சோதனைகளை பற்றியும் பேசலாம்.
கரெக்ட்… நம்ம ஹீரோ ஒரு மருத்துவர்… அப்படியே மரபணு ஆராய்ச்சியும் செய்பவர். ஹீரோயின்… அவங்க கேரக்டர் ரீ-டிஃபைன் ஆகிட்டே இருக்கும். அதனால் கதையோட போய் அவங்களை புரிஞ்சிக்கலாம்.
ரொம்பவும் லைட்டான… துளியூண்டு ஹெவியான கதை! வழக்கம்போல என்னுடைய கதையை படித்து தவறுகளை சுட்டிக் காட்டி… சஸ்பென்ஸை கெஸ் செய்து… முடிந்த போதெல்லாம் பாராட்டி… தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கம் தந்த சில்சீ ரீடர்ஸ் இந்த தொடரையும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த தொடருக்கு சிலாட் தந்து எழுத்தாளர்னு அங்கீகாரம் தந்த சில்சீ டீமிற்கு என்னுடைய நன்றி!
அடுத்த செவ்வாய் மாலை சந்திக்கலாம்…
நன்றி
அன்புடன்
சாகம்பரி.