தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார்
கனப்பு அடுப்பின் அருகே அமர்ந்திருந்த ப்ரூனோ மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். அடுப்பின் இருளில்…. உள்ளிருந்து எந்த ஒரு அசைவும் இல்லை.
“குட்டிம்மா… என் செல்லமே… எனக்கு தெரியும். நீதான் நேற்று இரவு அதிசெல்லத்தை காப்பாற்றி இருக்கிறாய். உனக்கு அடிபட்டு இருக்கிறது. உன்னுடைய மெலிந்த உடலுக்கு அப்படி ஒரு சக்தியை எது தந்தது? நீ உன் தங்கை மீது வைத்திருக்கும் அன்புதான் காரணம். . திணறி திணரி நீ விடும் சுவாசன் சொல்கிறது உனக்கு இப்போது தெம்பில்லை!. இந்த ஜூஸை குடிம்மா.” அவர் பழரசம் நிரம்பிய டம்பளரை . அடுப்பின் இருளில் நீட்டினார்.
“ நீ என்னுடன் பேசுவதில்லை. உன் குரலை நான் கேட்டதும் இல்லை. ஆனால் நீ மனதில் நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உன் மூச்சு காற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து உன்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது… உனக்கு என்னை பிடிக்கவில்லை. கிட்டதட்ட பதினைந்து வருடங்கள் நாம் நம்முடைய மௌனத்திலேயே கடந்திருக்கிறோம்” .அவர் குரல் கமறியது பின் அவரே தொடர்ந்தார்.
“குட்டிம்மா, என்னால் உன் மனதை புரிந்து கொள்ள முடியும் என்றபோது உன்னாலும் என் மனதை பார்க்க முடியும் அல்லவா? அதில் என்ன தெரிகிறது…?. ரொம்பவும் அடிபட்டு காயம்பட்டு வலித்துபோன மனதில் குற்ற உணர்வு கத்திபோல கீறி கீறி மேலும் புண்ணாக்கி வருகிறது என்பதை உணர்வாயா?. இனியும் இதனை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. வயதாகி விட்டது… பார்வை தெளிவில்லை… உடலும் நடுங்குகிறது… உன்னுடன் பேச ஒரு வாய்ப்பு தருவாயா?” இருளில் இருந்து எந்த அசைவும் தெரியவில்லை.
“இதுவரை நான் உன்னிடம் பேசியதில்லை… அதற்கு நீ வாய்ப்பும் தந்தில்லை. இன்றைக்கு அடிபட்டு ஓய்ந்திருக்கிறாய். அதை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் என்னமோ எனக்கு இனி அதிக நாட்கள் இல்லை என்று தோன்றுகிறது. என்னுடைய கடைசி விருப்பமாக இதை எடுத்துக் கொள்வாயா…?. நேற்று அதிதிக்கு நடந்ததுபோல இனி நடக்காது. அதிரதன் ரொம்ப நல்லவன். உன் தங்கையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வான். ஏனெனில் அவனுடைய இரத்தம் அப்படி… அவன் கற்பகத்தின் மகன்… அதிதியை காலமெலாம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே அவளுடைய மருமகளாக்கிக் கொண்டாள். இனி அதிதி பத்திரமாக இருப்பாள். ”
“ நான் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை. சுந்தரமும் துளசியும் என்னுடைய இரண்டு கண்கள்…. அவர்களின் அழிவிற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன்,,,, கேயாஸ் விளைவு என்று ஒன்று அறிவியலில் விளக்கப்படுகிறது. ஒரு பட்டாம் பூச்சி மரத்திலிருந்த பூவின் மீது அமர்ந்து தன் இறக்கையை அசைத்தது. அதிலிருந்து மென்காற்று கிளம்பி