தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 26 - ஜெய்
உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்... உழவு செழித்து அனைவருக்கும் நல் வளங்கள் பெருகிட எல்லாம் வல்ல இறையை பிரார்த்திப்போம்
சக்தி மருத்துவர்களை அடைத்து வைத்து இருந்த இடத்திற்கு செல்ல அவனுக்கு முன்பே அங்கு சந்தோஷும், சந்தியாவும் வந்து காத்திருந்தார்கள்....
“ஹே ரெண்டு பேரும் வந்து ரொம்ப நேரம் ஆச்சா.... அந்த பையனை பார்த்து பேச முடிஞ்சுதா....”
“பேசிட்டோம் சக்தி... அப்பறம் மணி கேஸ்லயும் துப்பு கிடைச்சிருக்கு.... மணி அந்த கோவிலுக்கு போக முன்னாடி முத்துக்கிட்ட பேசி இருக்கான்... அவங்க மூணு பேருமாதான் சேர்ந்து போகறதா சொல்லி இருக்கான்... அவங்க பஸ் ஏறி போனதை பார்த்த சாட்சி அங்க கடை வச்சிருக்கற அண்ணாச்சி... ஆனா அவர் சாட்சி சொல்ல வருவாரான்னு தெரியலை.... போலீஸ் விசாரணை போதே அவர் எனக்கு ஒண்ணும் தெரியாது... நான் வியாபாரத்துல பிஸியா இருந்ததால கவனிக்கலைன்னு சொல்லி இருக்காரு.....”
“அந்த கேஸ் பத்தி இனி கவலை இல்லை சந்தியா.... கொலையாளியே அவன் வாயால கொலை செய்ததை ஒத்துக்கிட்டான்....”
“ஏய் சக்தி.... நீ என்ன சொல்ற....”
“ஆமாம் சந்தோஷ்... உனக்கு எல்லாம் விவரமா வீட்டுக்கு போயிட்டு சொல்லுறேன்.... இப்போ மொதல்ல நாம அந்த டாக்டர்ஸ் போய் பார்ப்போம்... சந்தியா நீயும் சந்தோஷும் விசாரணை பண்ணுங்க.... நான் அவங்களுக்குத் தெரியாம வீடியோ எடுக்கறேன்....”
“ஓகே சக்தி... நீ அப்போ சைடு வழியா அந்த இடது பக்க ரூம்க்கு போயிடு.... அங்க இருந்து வீடியோ எடுத்தா கரெக்ட்டா கவர் பண்ண முடியும்...”, சந்தோஷ் சொல்ல அந்த அறைக்கு சென்றான்... சந்தோஷும், சந்தியாவும் முன்வாசல் வழியாக உள்நுழைந்தார்கள்.....
“ஹலோ மாப்பிள்ளைகளா.... நல்லா இருக்கீங்களா... நம்ம பசங்க உங்களை நல்லபடியா கவனிச்சாங்களா....”
“ஏய் நாங்க யாருன்னு தெரியாம தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கீங்க... இதுக்கெல்லாம் உங்களுக்கு இருக்கு...”
“இங்க பார்றா.... என்னமா நம்ம மாப்பிக்கு கோவம் வருது... அப்பறம் எங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல ரெடியா இருக்கீங்களா....”, என்ற சந்தோஷ் சந்தியாவைப் பார்த்து...
“கேள்வியை நீ கேட்கிறாயா... இல்லை நான் கேட்கட்டுமா...”, என்று திருவிளையாடல் சிவாஜி வாய்ஸில் கேட்டான்....
“இருவருமே கேட்கலாமே....”, சந்தியா கூற
“நீங்க மூணு பேரும் எத்தனை வருஷமா அந்த ஹாஸ்பிடல்ல வேலை செய்யறீங்க....”, சந்தோஷ் கேட்க மூவரும் அவன் வேறு யாரிடமோ பேசுகிறான் என்ற பாவனையில்