(Reading time: 11 - 21 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

அமர்ந்திருந்தனர்....

“என்னடா பசங்களா... எங்கயாச்சும் ஏடாகூடமா அடிச்சுட்டீங்களா.... மாப்பிஸ் காது பூடுச்சா... பதிலே சொல்ல மாட்டேங்கறாங்க...”

“அண்ணே பனிக்காலம் இல்லை... காது அடைச்சுட்டு இருக்கும்.... லெப்ட்ல ஒண்ணு, ரைட்ல ஒண்ணு விடுங்க.... அடைப்பு சரியாகிடும்....”, அங்கிருந்த அடியாள் சொல்ல, பயத்துடன் அவனை மூவரும் சந்தோஷை பார்த்தார்கள்... ஏற்கனவே சரியான உணவு இல்லாமல் துவண்டு இருந்தவர்கள், அடுத்து அடி வேறு தாங்க வேண்டுமா பயந்து போனார்கள்....

“என்னாத்துக்கு அடிச்சு நம்ம கையை வலிக்க வச்சுக்கணும்.... அங்க சாக்கடை குத்த ஒரு கம்பி வச்சிருந்தோமே.... அதை எடு அண்ணாத்தே....”

“சூப்பர் தங்கச்சி... உனக்கு மட்டும்தான் இப்படி சுளுவான ஐடியாலாம் வரும்...”

“பாருங்க மாப்பிஸ்... இந்த பொண்ணு எப்படி டெர்ரரா யோசிக்குதுன்னு... ஒழுங்கா பதிலை சொல்லிடுங்க... இல்லை சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை....”

“மொதல்ல எங்களை இங்க அடிச்சு வச்சு இத்தனை கேள்வி கேக்குற நீங்க யாருன்னு சொல்லுங்க... அப்பறம் நாங்க பதிலை சொல்லுறோம்....”

“உங்களோட யமன்.... பதில் சொல்லிட்டேனா... இப்போ எங்க கேள்விக்கு நீங்க சொல்லுங்க....”

“ஏய் எப்படி எங்களை மிரட்டி கேட்டாலும், உன்னோட ஒரு கேள்விக்கு கூட எங்கக்கிட்ட இருந்து பதில் வராது.... உன்னால ஆனதை பார்த்துக்கோ....”

“தப்பு மாப்பி தப்பு... சோறு தண்ணி காட்டாம கட்டி போட்டு வச்சிருக்கப்பவே இந்தத் துள்ளு துள்ளற.... வெளிய நல்லா தின்னுட்டு சுத்திட்டு இருந்தப்போ என்னல்லாம் பண்ணி இருப்ப.... ஓகே மாப்பிஸ்... நாம இப்போ ஒரு விளையாட்டு விளையாடலாம்.... அங்க ஒரு டிவி இருக்கு பார்த்தீங்களா.... அதுல ஒரு படம் இப்போ நான் காட்டுவேனாம்... மூணு பேரும் அதையே உத்து பார்த்து அதுல வர்ற ஆளுங்களை அடையாளம் காட்டுவீங்களாம்.... கரெக்டா சொல்றவங்களுக்கு நானு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் பரிசாத் தருவேனாம்... தம்பி இந்த பென்ட்ரைவை அங்க சொருகி டிவியை ஆன் பண்ணு.....”, சந்தோஷ் சொல்ல அங்கிருந்த அடியாள் ஒருவன் செய்தான்....

டிவியில் காணொளி ஓட ஆரம்பித்தது.... அதில் பதினாறிலிருந்து பதினெட்டு வயதிற்குள் இருக்கும் மூன்று ஆடவர்களையும், இரண்டு பெண்களையும் கை, கால் , கண் எல்லாவற்றையும் கட்டி ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்.... அவர்களுக்கு எதிர்புறத்தில் அதே நிலையில் மூன்று பெண்மணிகள் இருந்தார்கள்.... அவர்கள் அனைவரும் ஒரு வித மயக்க நிலையில் இருந்தார்கள்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.