“காமெடி... அப்பறமா சாப்பிட்டு சிரிக்கறோம்... டைம் வேஸ்ட் பண்ணாம சாப்பாடு போடுமா....”
“கை, கால் கழுவிட்டு வாங்க.... இட்லி பண்ணி வச்சிருக்கேன்.... சாப்பிடுங்க...”
“ஏம்மா இட்லிக்குத்தான் இம்புட்டு கேள்வி கேட்டியா... இதுக்கு நாங்க தோச மாவே குடிச்சிருப்போமே...”, சந்தியா சொல்ல அவள் அன்னை முறைக்க, முதல் ஆளாக சந்தோஷும், சக்தியும் சென்று டேபிளில் அமர்ந்தார்கள்....
மூவரும் சாப்பிட்டு முடிக்க சக்தி அன்று கல்லூரியில் நடந்ததை கூறி அங்கு எடுத்த காணொளியை இருவருக்கும் காட்டினான்... சந்தோஷும் தாங்கள் முத்துவை சந்தித்ததை தெரிவித்தான்....
“மணி விஷயத்துல எனக்கு வேற ஏதோ கூட விஷயம் இருக்கறதா படுது சக்தி.... இந்த சின்ன விஷயத்துக்கு இந்த அளவு அந்த தாளாளர் போவாருன்னு தோணலை... அதே மாதிரி நல்லா இருந்தவன் எப்படி திடீர்ன்னு தற்கொலை பண்ணிக்கிட்டான்னும் தெரியனும்...”
“ஹ்ம்ம் நாளைக்கு எப்படியும் ஒரிஜினல் டெத் சர்டிபிகேட் கிடைச்சுடும்ன்னு மதி சார் சொன்னாரு... அது வந்துட்டா எல்லா விஷயமும் தெளிவாகிடும்...”
மூவரும் பேசி முடித்து தூங்கி காலை எட்டு மணிப்போல் எழுந்து வர தொலைக்காட்சி செய்தியில் சாலையில் நடைபெற்ற விபத்தை பற்றி காட்டிகொண்டிருந்தார்கள்...
“ஹே சக்தி... அங்க பாரு அங்க அடிபட்டிருக்கறது அந்த வெளிநாட்டுக்காரன்தானே...”, சந்தியா சொல்ல, சக்தியும் சந்தோஷும் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தார்கள்....
தொடரும்
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}