“அவளை மறக்கும்வரை மனம் மாறும்வரை என்னால் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது முன்னி”
“புரியுதுண்ணா. அப்பா அம்மாகிட்ட நான் பேசிக்கறேன். ஆனால் நீங்க இங்கேயே இருங்க.”
“ஓகே… ஆனால் நாம் துளசிக்கு வேறு ஏதாவது நல்ல ஏற்பாடு செய்யலாம். எனக்குள்ள ஒரு திட்டம் இருக்கு. அது சரியா வொர்க்-அவுட் ஆச்சின்னா சொல்றேன்.” நிறுத்தி சொன்னான்…
”டாக்டர். சுந்தரம் ரொம்ப நல்லவன்”
“அது யார்ண்ணா””
டியர் ரீடர்ஸ்,
ஹாப்பி போகி…! பழையது கழிக்கும் நாள். தேவையில்லாத குப்பைகள் நம் மனம் விட்டு அகன்று நல்ல விசயங்கள் நமக்கு கிடைக்கணும்னு வேண்டிக்கறேன். பொங்கல் அன்னிக்கு மனதிற்கு ஆரோக்கியம் தரும் சூரியனின் ஆசியும்… மாட்டு பொங்கல் அன்னிக்கு வாழ்க்கைக்கு ஆரோக்கியம் கோமாதாவின் ஆசியும் பெற்று கணுப்பொங்கலில் உறவுகளை கண்டு உங்கள் குடும்பத்துடன் மகிழணும்னு வாழ்த்துகிறேன்
அன்புடன் சாகம்பரி
தொடரும்