தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 25 - சாகம்பரி குமார்
"நான்… நான்.. என்ன செஞ்சேன்" அவள் குரல் மெலிந்து கேட்டது.
அவளுடைய பார்வையை ஆய்ந்துணர்ந்தான். 'கண் களவு கொள்ளும் சிறுநோக்கம்'... கள்ள பார்வை வீசும் சுருங்கிய கண்கள்.. அது மறைக்க முயலும் ரகசியம்… அவனுக்கு உற்சாகத்தை தந்தது.
(கள்ளப் பார்வையினால் சுருங்கிய தலைவியுடைய கண்கள் சிறியதாகி கொஞ்சமே தலைவனை நோக்கினாலும்… அந்த பார்வை மறைக்க முயன்ற விசயம் அவனை பேருவகை கொள்ள வைத்ததாம்.)
"அதை பற்றி சொன்னேன்னா நீ நம்பவே மாட்டாய்… நான் அப்படி செஞ்சேனா.?. நானா அப்படின்னு கேட்பாய்" அவள் அருகே வந்து கிசுகிசுத்தான்.
அதிதிக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. ரொம்பவும் மோசமாக நடந்திருக்குமோ…?.
அந்த சமயத்தில் கங்காதரன் அவனை அழைக்கும் குரல் கேட்டது.
"ரதன் இங்கே வருகிறாயா?. தலைவர் வந்திருக்கார்"
அவர் குரல் கேட்கவும் அவளை விட்டு விலகி சென்றான். அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது. இப்போதைக்கு 'குற்றம்-நடந்தது என்ன?' என்பது தெரியாது. நல்லது.. !
'அப்பாடா ' என்று பெருமூச்சு விட்டவள்... நிம்மதியாக இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
ஆனால், மசாலாவிற்கு வெங்காயம் அரியும் போது 'என்னதான் நடந்தது?' என்று கேட்டு இருக்கலாமோ என்று தோன்றியது.
ஒருவேளை... அவள் தவறாக நடந்து கொண்டு இருந்து.. அவன் அதை சொல்லி காட்டியிருந்தால்…. இவ்வளவு அமைதியாக அவளால் சமைக்க முடியுமா என்று தோன்றியது.
சாப்பாடு முக்கியம்…! அதைவிட சமைப்பது மிக முக்கியம்….!. சமைக்கும்போது இருக்கும் அமைதியான மனநிலை அனைத்தையும் விட முக்கியம்.!
எனவே, இப்போதைக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்று அமைதியாக தன் வேலையை தொடர்ந்தாள். சப்பாத்தி செய்து சுவை பார்த்தபின் நிம்மதியானாள். ஓகே.. டேஸ்ட் சரியாக