(Reading time: 20 - 39 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இருக்கிறது!.

ஆனாலும் அதிரதனின் நெருக்கம் அவளை கவலைப்பட வைத்தது.  இதுவரை அவளிடம் ஒரு மாய எல்லையை வகுத்துக் கொண்டு விலகி நின்று பேசுவான்ஆனால் இப்போது மூச்சுக்காற்று மேலே படும்படியாக பக்கத்தில்நின்றுகொண்டு கிசுகிசுத்தானே!.

ஏன் அவ்வாறு நின்றான்?.

 அச்சோ…!.  அதிதி…  உன் மானம் கப்பல் ஏறி விட்டதா?.  நீ மறைத்து வைத்த ரகசியம் வெளியே வந்து விட்டதா?.  அதுதான் அதிரதனை   உன்னிடம் கேலியாக பேச வைத்ததா..?

அதிதிக்குள் கேள்விகள் சரமாரியாக கிளம்பி அவளை கவலைப்பட வைத்தன.

 அப்போது உள்ளே வந்த அதிரதனை நிமிர்ந்து பார்க்கவே சங்கடமாக  அவளுக்கு இருந்தது.

"நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?. அப்பா உன்னை கூப்பிடுகிறார். தலைவர் உன்னிடம் பேசவேண்டும் என்று சொன்னாராம்"

அதிரதன் அவளை அழைக்கவும், அவள் அவனுடன் வெளியே சென்றாள். அங்கு தலைவரும் கங்காதரனும் அமர்ந்திருந்தனர். அவளைப் பார்ப்பதும் தலைவர் அவளிடம் பேச ஆரம்பித்தார்.

" வாம்மா அதிதி!   ரொம்ப நாள் கழிச்சு இன்றைக்குதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இன்னைக்கு ஒரு முக்கியமான பிரச்சனை தீர்க்கப்பட்டதுஉங்க அம்மா துளசி மேல எந்த தப்பும் இல்ல அப்படின்னு நிரூபிக்கப்பட்டது. அது ஒரு பெரிய சதிம்மா. மாப்பிள்ளைதான் புத்திசாலித்தனமாக விஷயத்தை கையாண்டு உண்மையை வெளிப்படுத்தினார்." உற்சாகமாக பேசினார்.

"ஆமாங்கய்யாஎல்லாத்தையும்  எனக்கு இப்பதான் சொன்னாங்க. பாட்டி இதுல சம்மந்தப்பட்டு இருக்காங்க அப்படின்னு தெரிந்தது. ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. அவங்க ஏன் இப்படி செஞ்சாங்க?. அதுதான் எனக்கு புரியல. அம்மா மேல அவங்களுக்கு அவ்வளவு பெரிய கோபம் எப்படி வந்துச்சு?."

"எல்லாம்  இந்த சொத்துக்காக நடந்த விஷயம்தான். தன்னோட மகள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.