என்று எண்ணம் அவனுக்கும் மகிழ்ச்சியை தந்தது. அதற்காக…?
ஆஹாங்… இப்படி புகழ்ந்து பேசி அவனை திசை திருப்ப பார்க்கிறாளா…? என்ன ஒரு வில்லத்தனம்..! அதிரதன் சுதாரித்தான்.
"அப்படி இப்படின்னு பேசி நாளைக்கு உங்க சித்திக்கு பஞ்சாயத்துல தரப்போற தண்டனையை மாற்ற முயற்சிக்காதே" அதிரதன் கண்டிப்பாக பேசினான்.
"நான் எதையும் மாற்ற முயற்சிகல. எங்க அம்மாவுக்கு பண்ணின பாவத்துக்கு எங்க பாட்டி மனசு வலிச்சு இறந்து போயிட்டாங்க. அவர்களை இனிமே ஒன்னும் செய்ய முடியாது. எங்க சித்தி போட்ட திட்டத்தினாலும் எனக்கு ஒன்னும் ஆகல. அவர்களுக்கு எந்த தண்டனையும் தர வேணாம். இதை முக்கியமாக நான் ஏன் சொல்றேன்னா அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு"
"ஏன்மா, ரெண்டு சின்ன குழந்தைகளை வைத்து இருக்கிறவங்க செய்ற வேலையா அது?. உன்னை அசிங்கப்படுத்தி அவங்களுக்கு என்ன சந்தோஷம் வரணுமாம்?" தலைவர் படபடத்தார்.
"நான் அவங்கள பத்தி ஏன் நினைக்கல. அவங்களோட குழந்தைகளை பத்தி தான் பேசுறேன். ரெண்டுமே பதின்ம வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். அவர்களுடைய மனநிலை இதனால் பாதிக்கப்படும் அப்படின்னு பயப்படுகிறேன்." நிதானித்து தொடர்ந்தாள்.
" ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மாங்கிறது கடவுளின் பிம்பம். அதுதான் அவங்க வாழ்க்கை முழுக்கவும் உந்து சக்தியாக கூட இருக்கும். அது இல்லாம போயிடுச்சு என்றால் அவர்கள் எப்படி நேர்மையான நம்பிக்கையோட வாழ்க்கை வாழ முடியும்.?"
'அதனால என்ன செய்யணும்?". அதிரதன் வேகமாக குறுக்கிட்டான்.
"சித்திய போலீஸ்ல புடிச்சுக் கொடுக்கிறது... ஊரைவிட்டு தள்ளி வைக்கிறது… இந்த மாதிரி செய்யாமல் அவங்களுக்கு வேற ஏதாவது… தன் தவறை உணர்ந்து திருந்த கூடிய பனிஷ்மென்ட் கொடுங்க."
"நீ என்ன லூசா?" அதிரதனுக்கு பயங்கர கோபம் வந்தது.
"விடுங்க மாப்ளை. அது துளசியோட பொண்ணு… அது அப்படித்தான் பேசும். நாமளும் அது சொல்ற நியாயத்தைப் புரிந்து கொள்வோம். நாம கொடுக்கிற