"உங்க சித்திக்கு தண்டனை தரக்கூடாது தரக்கூடாது என்று சொல்லிகிட்டே நீ மிகப்பெரிய தண்டனை கொடுத்திட்ட. அந்த அம்மாவிற்கு அந்த வீடு வாழ்நாள் சிறை ஆகத்தான் இருக்க போகுது" என்று சொன்ன அதிரதன் அவளை கூர்ந்து நோக்கினான்.
"ஏன் அப்படி சொல்றீங்க?. நான் அவங்க மனசுல இருக்குற விரோதத்தை வளர்க்க வேண்டாம் அப்படின்னு நினைச்சு தான் அந்த வேலையை செய்தேன்"
"எனக்கு மனுஷங்களோட சைக்காலஜி நல்லா தெரியும். நீ நினைக்கிற மாதிரி உங்க சித்தி இனிமே நிம்மதியா இருக்க மாட்டாங்க. இதோட பின்விளைவுகளை நீ எதிர்பார்த்து காத்திரு. அந்த அம்மா ஜெயிலுக்கு போய் இருந்தா கூட நிம்மதியாக இருந்திருக்கும்" என்றான்.
அவனிடம் மேற்கொண்டு கேட்கும் முன்னே வினயின் இருசக்கர வாகனம் அருகே வந்து நின்றது.
" வணக்கம் பாஸ்" என்று சொன்னபடியே வினய் வண்டியில் இருந்து இறங்கினான்.
"அதிதி நீ வினைக்கு காபி கொண்டு வந்து கொடு. அப்படியே அப்பாவையும் இங்கே அழைத்து வா. நாம் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும்" என்று அதிதியிடம் அதிரதன் சொன்னான். அதற்கு ஒப்புக்கொண்ட அதிதி உள்ளே சென்றாள்.
"பாஸ் நீங்க அவங்களிடம் அபிதாவை பற்றி சொல்லப் போகிறீர்களா?" என்று கலவரமாகவும் வியப்பாகவும் வினய் கேட்டான்.
"ஆமாம் இனி இந்த விஷயத்தை அதிதி புரிந்துகொண்டால் மட்டுமே நாம் மேற்கொண்டு என்ன செய்வது என்பதை திட்டமிட முடியும். நாளை அங்கிளை பார்க்க போகும் பொழுது அதிதியும் நம்முடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெட்டெர் லேட் தேன் நெவர்!"
உள்ளே சென்ற அதிதி கங்காதரன் உடன் திரும்பி வந்தாள். அவர்கள் அருகில் இருவரும் அமர்ந்தனர். சில்வண்டுகள் ரீங்காரம் ஆரம்பித்த அந்த அமைதியான இடத்தில் அதிரதனின் குரல் மட்டும் ஒலிக்கத் தொடங்கியது.
தொடரும்
Next episode will be published on 31st Mar. This series is updated weekly on Tuesday Evenings.