இதுக்கெல்லாம் ஒரு பதில் கிடையாது. உனக்கு உன்னோட நியாயம் தான் முக்கியம்"
"உங்களுக்கு கோபம் வரும்ணு இப்பதான் எனக்கு தெரியுது.அதான் நாளைக்கு அது பத்தி பேசிக்கலாம் எல்லாரும் சொல்லிட்டாங்கலே. இனிமேல் நம்ம நம்ம விஷயத்தைப் பார்க்கலாமா?"
"எதைப்பற்றியும் பேச வேணாம். எனக்கு வேலை இருக்கு. நீ படுத்து தூங்கு ". என்று கோபமாக சொல்லிய அதிரதன் வெளியே சென்று விட்டான்.
உண்மையிலேயே அவனுக்கு வினயிடம் பேச வேண்டிய விஷயம் இருந்தது. இப்பொழுது அவனுக்கு அபி பற்றிய முழு விவரங்கள் தெரிந்து விட்டது. அபிதா…!
வினய் சொல்லிய 'முற்றுப்பெறாத ஆராய்ச்சியின்' விளைவுகள் என்னவென்று இப்பொழுது அவனுக்கு தெரிந்து விட்டது. முக்கியமாக அபியை பற்றி அவனிடம் பேச வேண்டும். அவனிடம் கலந்தாலோசித்தால் ஒரு நல்ல வழி கிடைக்கலாமோ…
ஏனெனில், வினய் அவனுக்கு உதவியாளராக இருப்பதால் அவனுடைய நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டு இந்த வேலையை முடிக்க முழுமனதாக ஒத்துழைப்பான் என்று நம்பினான்.
அமைதியான இருள் சூழ்ந்த அந்த இரவில் அவன் தன்னிடம் தன்னிடமிருக்கும் விவரங்களை தெளிவாக விளக்கினான். இந்த விஷயத்தில் ஏற்கனவே ஆர்வம் கொண்டிருந்த வினய் உடனடியாக அவனை வந்து சந்திப்பதாக கூறினான்.
உடனே மறுநாள் வந்து சந்திக்குமாறு கூறிய அதிரதன் வரும்பொழுது அந்த பழைய புராஜெக்ட் குறிப்புகளை எடுத்துக் கொண்டு வருமாறும் கூறினான். வினய் அதற்கு ஒப்புக்கொண்டான். மறுநாள் மாலை அங்கு வருவதாக கூறினான். அவனிடம் பேசி முடித்து வீட்டிற்குள் சென்ற அதிரதன் திகைத்தான்.
ஹாலின் நட்ட நடுவில் சோபாவில் குத்துகாலிட்டு அமர்ந்து கொண்டிருந்த அதிதி அவனை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்.
'ஏன் இன்னுமே தூங்கப் போகலியா?. இப்படி நட்ட நடு ராத்திரியில் முழிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கிறாயே என்ன விஷயம்?" என்று அதிரதன்