அவளிடம் கேட்டான்.
"எப்படி தூக்கம் வரும்?. நீங்கதான் என்ன நடந்ததுன்னு சொல்ல மாட்டேங்கறீங்க எனக்கு தூக்கமே வரல" அதிதி அலுத்துக் கொண்டாள்.
"என்ன நடந்தது... நீ எப்படி நடந்துகிட்ட.. அப்படின்னு நான் சொன்னா உனக்கு இந்த ஜென்மத்துக்கு தூக்கம் வராது. பேசாமல் ஓடிப் போய் படுத்து தூங்கு"
"சும்மா எதையாவது பேசி பயமுறுத்தாதீர்கள். இப்போ எனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும். என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க"
உண்மையில் அவனுக்கு அதை பற்றி இப்போது பேச விருப்பம் இல்லை. ஏனெனில் அவனுடைய முழு கவனமும் அபிதாவுக்கு செய்ய வேண்டிய சிகிச்சை முறையை திட்டமிடுவதில் மட்டுமே இருந்தது. இப்பொழுது அதிதியுடன் விளையாடுவதற்கோ கேலி பேசுவதற்கோ அவன் விரும்பவில்லை.
ஆனால் அதிதியை அவனிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தாள். எரிச்சலூட்டிய ஒரு நொடியில் அவன் அவளிடம் பட்டென்று சொன்னான்.
"ஆங்… நீ என்னோட தோளில சாஞ்சுகிட்டு உனக்கு ஒரு முத்தம் தர சொல்லி என்னிடம் கேட்டாய். போதுமா?"
உண்மையில் அதுதான் நடந்தது. டெஸ்ட் செய்ய ரத்தத்தை எடுத்து கொண்டபின் அவள் "நான் நல்ல பெண் தானே" என்று அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டு தன்னுடைய கன்னத்தை ஒரு கன்னத்தை காட்டி,
"பாப்பாவுக்கு இச் கொடுங்க டாடி" என்று கெஞ்சினாள். அவன் அவளை உறங்கவைக்க படாத பாடல்லவா பட்டான். இப்போது கேள்வி கேட்பதை பாரு…!
"என்ன ஆளு நீங்க?. நான் எதோ சுயநினைவில்லாமல் கேட்டேனா அத நீங்க செஞ்சுடுவீங்களா?"
இந்த பழி வேறயா? என்று மனதிற்குள் நினைத்தவன் அவளை முறைத்து பார்த்துவிட்டு தன் அறைக்கு உறங்க சென்று விட்டான்.
ஆனால் அதிதிக்கு தான் உறக்கம் வரவில்லை. அவள் கேட்டதற்கு அவன்