(Reading time: 5 - 10 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

இருவரும், ராமஜபம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, காப்பாளர் பரபரப்போடு அங்கு வந்தார்.

" ரெண்டுபேரும், வெளியிலே வராம, அறைக்குள்ளேயே இருங்க, இன்னும் கொஞ்ச நேரத்திலே, சுகாதார அமைச்சர், இல்லத்தை பார்வையிட வரப்போறாராம். கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லையேன்னு விசாரிக்கத்தான் வராரு, அவர்கூட பெரிய அதிகாரிங்களெல்லாம் வருவாங்க! புரிஞ்சுதா?"

" ஐயா! ஒரு விஷயம்!"

" சொல்லுங்க சீக்கிரமா! எனக்கு நெறயா வேலையிருக்கு......."

" எங்க மாப்பிள்ளை ரஞ்சித், போலீஸிலேதான் வேலை செய்யறாரு, அவரை முடிஞ்சா, பார்த்து, அந்தப் பொண்ணை பற்றி விசாரிக்கச் சொல்லலாமே...."

" என்ன பெயர் சொன்னீங்க?"

" ரஞ்சித்!"

" ரஞ்சித்தா? உங்க மாப்பிள்ளையா? இதை ஏன் முன்பே என்னிடம் சொல்லலே, அவருதான்யா இப்ப கமிஷனர்! என் ரொம்ப நாளைய நண்பர்! சரி சரி, ஒருவேளை, அமைச்சரோட இன்னிக்கி அவரு வந்தாலும் வரலாம்.....பார்ப்போம்!"

தர்மன் - பிரபா ஜோடிக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டது! மனதுக்குள்ளே குதூகலம்! பெற்ற மகனை பார்க்கும்

பாக்கியம் கிட்டும்போலிருக்கிறதேஎன்ற நைப்பாசை!

முதுமையிலே உறவுகளை மனம் தேடி அலையும்போது, உறவினர்களை பார்த்துப் பேசமுடியவில்லை என்றால், அந்த வேதனையை சொல்லி மாளாது, அனுபவித்தால் மட்டுமே புரியும்!

" பிரபா! ரஞ்சித் வருவானா? வந்தாலும் அவனுடன் பேசமுடியுமா?"

" கதையை கெடுத்தீங்களே, அவன் நம்மை கண்டுக்கவே மாட்டான், ஏன்னா, அவனுக்குப் பொண்ணு கொடுத்தவங்க முதியோர் இல்லத்திலே வாழறது, அவனுக்கு அவமானமில்லையா?"

" ஆமாம், நாம அவன் பெயரை சொல்லியிருக்கக் கூடாதோ......?"

" ஆனது ஆயிடுத்து, இப்ப என்ன பண்ணமுடியும்? விடுங்க, நடக்கறபடி நடக்கட்டும்!"

வெளியே திடீரென சலசலப்பு கேட்டது.

" அமைச்சர் வந்துட்டாருன்னு நெனைக்கறேன்....."

சில நிமிடங்களில், காப்பாளர், அமைச்சரை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.