தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 01 - ஜெபமலர்
மாப்பிள்ளை வீட்டார் வந்திட்டாங்க என்று ஒருவர் சத்தம் கொடுக்க அந்த சத்தத்தை மிஞ்சி வரவேற்றது வெடி சத்தம்.
தன் அறையில் அமர்ந்து இருந்த மணப்பெண் தேவியின் தோழிகள் மாப்பிள்ளையை பார்த்து விட்டு , தேவி செமயா இருக்காருடீ உன் ஆளு.. என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் கூற தேவியின் முகம் மருதாணி இல்லாமலே சிவந்தது.
பெண்கள் கூடி இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கும் பேச்சுக்கும் குறை இருக்குமா என்ன.. அதுவும் மணப்பெண்ணின் தோழிகள் என்றால் சும்மாவா.. அந்த அறையே சிரிப்பொலியில் நிறைய, சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க என்று சொல்லி சென்ற மங்கலத்தின் குரல் கேட்டு அறையே அமைதி ஆனது. ... ்க்காத மாதிரி இப்படி பார்த்து மானத்தை வாங்கதடா என்று சொல்லவும் தான் பிரபாகரனுக்கே உரைத்தது. ச்ச எப்படி பார்த்து வைத்திருக்கோம் அதுவும் கல்யாண பொண்ணை என்று சொல்லி தலையை தட்டி கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...