மாந்திற்குள் மன்னிப்பு கேட்டு கொண்ட தமிழ்செல்வி, "ஹ்ம்ம் ஆனா ரெண்டு சிஸ்டேர்ஸ் இருக்காங்கனு சொன்னனீங்கள்ல" என்றவள் "எனி வே இந்த வீக் நம்ம காலேஜ்ல நடக்கற இண்டேர் காலேஜ் காம்பெடிஷன் முடிஞ்சதும் என் பாதையை சொல்றேன்" என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
தமிழ்செல்விக்காக அந்த வணிக வளாகத்தின் வெளியே மனதில் ஒரு திக்திக்க்குடன் காத்திருந்தான் தமிழ்மாறன். அவன் கையில் இருந்த மொபைலில் தமிழ்செல்வியுடனான அழைப்பு இன்னும் இணைப்பில் இருக்க அங்கே முரளியுடன் அவள் பேசுவதை எல்லாம் அவனால் கேட்க முடிந்தது.
"தமிழ், என்னாச்சு???" அந்த மாலின் உள்ளே இருந்த காபி ஷாப்பில் இருந்து வெளியே வந்த தமிழ்செல்வியிடம் ஓடி வந்த தமிழ்மாறன் கேட்க, "ஐயோ எனக்கு பயந்துலே கைகாலெல்லாம் உதறுது மாறா" தமிழ்செல்வி அழாத குறையாக சொன்னாள்.
"சரி சரி வா டென்சன் ஆகாத... மொபைலை ஆன் பண்ணி வெச்சுருந்த...நீ பேசுனதெல்லாம் கேட்டேன். பயப்படாத...இனி அவன் உன்கிட்ட அப்ரோச் பண்ணமாட்டான்" அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் சொன்னான் மாறன்.
"ஆனாலும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாறா. ரொம்ப ஹார்ஷா பேசிட்டனா??? அன்னைக்கு டீவில பூஜை படம் போட்ருந்தாங்க. அதுல ஸ்ருதி ஹாசன் இப்படி தான் ஒரு பையனை அவாய்ட் பண்ணுனாங்க . அதுல பாக்கும்போது ஈஸியா இருந்துச்சு ஆனா இப்போ நேருல சொல்லும்போது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. பேசாம அப்படியே ஓடி வந்துடலாம்னு கூட நெனைச்சேன். ஆனா இந்த காதலை வலக்கரத்தை விட இப்படி முறிக்கிறது தான் நலலதுனு தோணுச்சு. நான் பண்ணுனது தப்பா???" பாவமாக கேட்டவளை பார்த்து இல்லை என்பது போல தலையசைத்தான் தமிழ்மாறன்.
இதை படித்து முடித்த ராம்க்கு எதுவொ புரிவது போல இருந்தது. அடுத்த பக்கத்தை திருப்பினான்.
தொடரும்
Next episode will be published on 3rd Oct. This series is updated weekly on Saturday mornings.