(Reading time: 13 - 26 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

அதனால அவள் இம்ப்ரெஸ் ஆகி இப்படி செய்றாஆனால் அவளுக்கு நினைவு திரும்பும் போது இதெல்லாம் தெரியாது. உங்களிடம் பழைய மாதிரியே நடந்துக்குவா. அதை உங்களால் தாங்க முடியாது."

"உன்னுடைய எச்சரிக்கைக்கு நன்றி.. நீ சொல்வது உண்மைதான். அம்னீசியாவிலிருக்கும்போது நடந்தவை அந்த பேஷன்டிற்கு நினைவிற்கு வராதுரேச்சலுக்கு அம்னீசியா சரியாக கூடாதுன்னு சில சமயம் நான் சுயநலமாககூட நினைக்கிறேன்…." அவர் குரல் உடைய ஆரம்பித்தது.

"ஆனட்டி நீங்க ஒரு டாக்டர்.. இப்படி நினைக்கலாமா….?"

"நினைக்க கூடாதுதான். ஆனால்எனக்கு இருக்கிற ஒரு உறவு…. என் செல்லம் ரேச்சல்தானேஅவள் என்னை யாரோவென்று பாரத்தால் என்னால் தாங்க முடியாதுஐ டோன்ட் வான்ட் டு லூஸ்இனிமேல் எதையும் இழக்க என்னால் முடியாது." அவர் அழ ஆரம்பிக்க

திடுதிடுவென ஓடி வந்த ரேச்சல் ஷீலாவை கட்டிக் கொண்டாள்.

"நோம்மாஅப்படி எதுவும் நடக்காது. நான் ஒருநாளும் உங்களை விட்டு விலக மாட்டேன். எனக்கு நினைவு திரும்பாமல் இருந்தாலே நல்லது. அழாதீங்கலவ் யூ மா…" என்று அழுதபடி ஜெமியிடம் திரும்பி,

"உன்னால எப்படி இப்படி பேச முடியுது. அம்மாவை ஹர்ட் பண்ணதான் வந்தியாஅவங்க நிம்மதியா இருப்பது பிடிக்கலையா…" என்று திட்ட ஆரம்பித்தாள்.

ஜெமி செய்வதறியாது திகைத்தான். அவன் எதற்காக பேச ஆரம்பித்தானோ அதை இனி  சொல்ல முடியாது.

"ஓகே…  ஐ அம் சாரி ஆன்ட்டி. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் அப்புறமா பேசறேன்" என்று சொல்லிவிட்டு ஜெமி நகரப் பார்த்தான்.

"இரு இரு!.  நீ எதுக்கு அம்மாகிட்ட அப்படி பேச ஆரம்பிச்ச?" என்று ரேச்சல் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

"எனக்கு ஒன்னும்  தனி பர்பஸ் இல்லை. ஆனா நீ எப்போதுமே அவங்ககூட இருப்பேனு சொல்ல முடியாது இல்லையா"

" ஏன் ஏன் நான் இருக்க மாட்டேன்?" என்று கேட்டாள்.

அவள் குறுக்கு விசாரணை செய்வது போல் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் ஜெமிக்கு கோபம் வந்தது. அவளிடம் உண்மையைச் சொல்ல முடியுமா?

' அம்மா தாயே நீயே வேற வீட்டு பொண்ணு. உனக்கு தெரிஞ்சவங்க உன்னை கூட்டிட்டு போயிட்டாங்கன்னால்…  ஆன்ட்டி எவ்வளவு வருத்தப்படுவாங்கஅவங்களால அந்த நிலைமையை சமாளிக்க முடியுமா?. அதனாலதான் நான் தடுக்க பார்க்கிறேன்.' என்கிற

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.